நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதனை முடியுமானளவு செய்யுங்கள்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதனை முடியுமானளவு செய்யுங்கள். அளவுக்கு அதிகமான கேள்விகளைக் கேட்டதும், தங்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்களோடு ஒத்துப் போகாததுமே உங்களுக்கு முன்னால் இருந்தவர்களை அழிவுக்கு ஆக்கபடுத்தியது.
Explanation
Benefits
இங்கு தடுக்கப்பட்ட எதிலும் செய்வதற்குச் சலுகை வழங்கப்பட வில்லை, கட்டளையானது ஆற்றல் மற்றும் இயலுமையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒன்றை விடுவது முடியுமான விடயமாகும், ஏவப்பட்ட ஒன்றை செய்வதற்குத் தான் மேலதிக ஆற்றல் அவசியமாகின்றது.
அதிகம் கேள்வி கேட்பது தடைசெய்யப்பட்டிருத்தல். அறிஞர்கள் கேள்வியை இரண்டு வகைகயாக பிரித்துள்ளனர். ஒன்று : மார்க்க விடயத்தில் தேவையான கற்பிப்பதை நோக்காகக் கொண்டவை. இது வலியுறுத்தப்பட்ட ஒரு விடயம் வரவேற்கத்தக்கதும் கூட. இவ்வகை கேள்விகளே ஸஹாபாக்களின் கேள்வியாக இருந்தது. இரண்டாவது: வலிந்து சிரமப்படுத்திக்கொள்ளும் விதத்தில் அமைந்த பயனற்ற கேள்விகள். இவ்வகை கேள்விகள் தடை செய்யப்பட்டவை.
முன்சென்ற சமூகங்களில் நிகழ்ந்தது போன்று (நபிமார்களிடம் அதிக கேள்விகள் கேட்டு) தமது நபிக்கு மாற்றமாக நடப்பதை விட்டும் இந்த சமூகத்தை எச்சரித்தல்.
தடை செய்யப்பட்டவற்றில் சிறிதளவு, அதிகளவு என்ற வரையரை கிடையாது. மாறாக அனைத்தையும் அது உள்ளடக்குகின்றது. ஏனெனில் தவிர்ந்து கொள்ளும் போது அதில் சிறிதளவு, அதிகளவு அனைத்தையும் தவிர்ந்து கொள்வதன் மூலம்தான் சாத்தியமாகும். உதாரணமாக வட்டியை இஸ்லாம் தடுத்துள்ளது. அதில் சிறிதளவு, அதிகளவு அனைத்தையும் இத்தடை உள்ளடக்குகின்றது
ஹராமான ஒன்றிற்கு வழிவகுக்கும் காரணிகளை கைவிடுவதும் ,தவிர்ந்து கொள்ளுதல் என்பதில் உள்ளடங்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கட்டளையொன்றை செவிமடுக்கும் ஒருவர் அது கடமையா, ஸுன்னத்தா எனக் கேட்பது அவசியமில்லை. மாறாக அதனை செய்ய விரைய வேண்டும். ஏனெனில் நபியவர்கள் உங்களால் முடியுமான அளவு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்கள்.
அதிகமாகக் கேள்விகள் கேட்பது அழிவுக்குக் காரணமாகும். குறிப்பாக புறக்கண்களுக்கு தெரியாத விடயங்கள் மற்றும் மறுமை நாளின் நிலைமைகள் போன்ற அடைய முடியாத விடயங்களில் கேள்விகேட்பதை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அவற்றைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்பதால் நீ அழிந்து விடுவாய் அதுமாத்திரமின்றி நீ ஒரு தீவிரப்போக்கு கொண்டவனாகவும் மாறிவிடுவாய்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

