'(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : '(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன, கோத்திரத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும். யார் என் சமுதாயத்தாருக்கு எதிராக கிளர்ச்சி செய்து, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை'.
Explanation
சத்தியம், அசத்தியம் பற்றிய எவ்வித தெளிவுமின்றி வெறுமனே தனது கோத்திரம் , அல்லது இனத்திற்காக கோபம் கொண்டு மார்க்கத்திற்கோ, சத்தியத்திற்கோ உதவும் நோக்கமின்றி எந்த அறிவோ தெளிவோ இன்றி தனது இன மற்றும் குலத்திற்காக போராடி அதே நிலையில் மரணித்தாலும் அவரும் அறியாமைக் காலத்தில் மரணித்தவர் போன்றாவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஒருவர் புரட்சி செய்து, நல்லவர்கள், தீயவர்களை தாக்கி தான் செய்வதை பொருட்படுத்தாது ஒரு முஃமினை கொல்வதால் அவனுக்கு கிடைக்கும் தண்டனையை அஞ்சாது, முஸ்லிம் பிரதேசங்களில் ஒப்பந்த அடிப்படையில் வாழும் மாற்று மதத்தவர், அல்லது ஒப்பந்தம் செய்து ஏற்றுக் கொண்ட அதிகாரிகளின் ஒப்பந்தங்களை நிறைவேற்றாது அதனை முறித்து அனைவரையும் தாக்குவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இவ்வாறு செய்பவன் மேற்படி கடுமையான எச்சரிக்கைக்கு உட்படுவான்.
Benefits
ஆட்சித் தலைவருக்கு கட்டடுப்படுவதை விட்டும் விலகி முஸ்லிம் சமூகத்தின் கூட்டமைப்பை விட்டும் விலகியிருப்பது பற்றிய கடுமையான எச்சரிக்கை இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலையில் மரணித்தால் அறியாமைக் கால மக்களின் வழியிலேயே மரணித்தராகவே கருதப்படுவார்.
கோத்திரவெறிக்காக போராடுவது இந்த ஹதீஸில் தடைசெய்யப்பட்டுள்ளமை.
உடன்படிக்ககைள், ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது கடமையாகும்.
தலைமைக்குக் கட்டுப்பட்டு, கூட்டமைப்புடன் சேர்ந்திருப்பதில் அதிக நன்மைகள் பாதுகாப்பு, நிம்மதி, சீரான நிலமை போன்றன கிடைக்கிறது.
ஜாஹிலிய்யக்கால நிலைகளுக்கு ஒப்பான செயல்களை செய்வது தடைசெய்யப்பட்டிருத்தல்.
முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் சேர்ந்திருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருத்தல்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

