المرسلات
Al-Mursalat
The Emissaries
1 - Al-Mursalat (The Emissaries) - 001
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا
1. நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!
2 - Al-Mursalat (The Emissaries) - 002
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا
2. இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக!
3 - Al-Mursalat (The Emissaries) - 003
وَٱلنَّـٰشِرَٰتِ نَشۡرٗا
3.(மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக!
4 - Al-Mursalat (The Emissaries) - 004
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا
4. (உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக!
5 - Al-Mursalat (The Emissaries) - 005
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا
5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
6 - Al-Mursalat (The Emissaries) - 006
عُذۡرًا أَوۡ نُذۡرًا
5, 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
7 - Al-Mursalat (The Emissaries) - 007
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ
7. நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.
8 - Al-Mursalat (The Emissaries) - 008
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ
8. அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.
9 - Al-Mursalat (The Emissaries) - 009
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ
9. அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்.
10 - Al-Mursalat (The Emissaries) - 010
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ
10. அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்.
11 - Al-Mursalat (The Emissaries) - 011
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ
11. அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.
12 - Al-Mursalat (The Emissaries) - 012
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ
12. (இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?
13 - Al-Mursalat (The Emissaries) - 013
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ
13. தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்!
14 - Al-Mursalat (The Emissaries) - 014
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ
14. (நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா?.
15 - Al-Mursalat (The Emissaries) - 015
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
15. (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
16 - Al-Mursalat (The Emissaries) - 016
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ
16. (அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?
17 - Al-Mursalat (The Emissaries) - 017
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ
17. அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,
18 - Al-Mursalat (The Emissaries) - 018
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
18. (அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.
19 - Al-Mursalat (The Emissaries) - 019
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
19. ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
20 - Al-Mursalat (The Emissaries) - 020
أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ
20. ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?
21 - Al-Mursalat (The Emissaries) - 021
فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ
21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,
22 - Al-Mursalat (The Emissaries) - 022
إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ
21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,
23 - Al-Mursalat (The Emissaries) - 023
فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ
23. பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.
24 - Al-Mursalat (The Emissaries) - 024
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
24. ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
25 - Al-Mursalat (The Emissaries) - 025
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا
25, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?
26 - Al-Mursalat (The Emissaries) - 026
أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا
25, 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?
27 - Al-Mursalat (The Emissaries) - 027
وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا
27. அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்.
28 - Al-Mursalat (The Emissaries) - 028
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
28. (நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
29 - Al-Mursalat (The Emissaries) - 029
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
29. ‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள்.
30 - Al-Mursalat (The Emissaries) - 030
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ
30. மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்).
31 - Al-Mursalat (The Emissaries) - 031
لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ
31. அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.
32 - Al-Mursalat (The Emissaries) - 032
إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ
32. (எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்.
33 - Al-Mursalat (The Emissaries) - 033
كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ
33. அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.
34 - Al-Mursalat (The Emissaries) - 034
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
34. (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
35 - Al-Mursalat (The Emissaries) - 035
هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ
35. இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.
36 - Al-Mursalat (The Emissaries) - 036
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ
36. மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.
37 - Al-Mursalat (The Emissaries) - 037
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
37. (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
38 - Al-Mursalat (The Emissaries) - 038
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ
38. இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.
39 - Al-Mursalat (The Emissaries) - 039
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ
39. ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்).
40 - Al-Mursalat (The Emissaries) - 040
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
40. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
41 - Al-Mursalat (The Emissaries) - 041
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ
41. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்.
42 - Al-Mursalat (The Emissaries) - 042
وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ
42. அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.
43 - Al-Mursalat (The Emissaries) - 043
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
43. (அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்).
44 - Al-Mursalat (The Emissaries) - 044
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
44. இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்.
45 - Al-Mursalat (The Emissaries) - 045
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
45. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
46 - Al-Mursalat (The Emissaries) - 046
كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ
46. (இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்.
47 - Al-Mursalat (The Emissaries) - 047
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
47. (இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
48 - Al-Mursalat (The Emissaries) - 048
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ
48. அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.
49 - Al-Mursalat (The Emissaries) - 049
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
49. (அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
50 - Al-Mursalat (The Emissaries) - 050