افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم.
#6203[சரியானது]
HadeethEnc · 1.36.0

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் இதனை ஓதுவார்களெனக் கூறினார்கள். பொருள் : உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன், தீமையிலிருந்து விலகுவதும் நன்மையின் மீது ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத்தவிர வேறெவரையும் நாங்கள் வணங்கமாட்டோம். அருட்கொடைகள் அனைத்தும் அவனுடையதே. சிறப்பும் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன

Available translations

Choose an available translation of this Hadeeth

01

Hadeeth text

அபுஸ்ஸுபைர் அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு ஸுபைர் அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகையிலும் ஸலாம் கொடுத்ததும் பின்வருமாறு ஓதுவார்கள் : 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீகலஹூ லஹுல்முல்கு வலஹுல்ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் பழ்லு வலஹுஸ் ஸனாஉல் ஹஸன். லாஇலாஹ இல்லல்லாஹு முஃக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காபிரூன்'. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் இதனை ஓதுவார்களெனக் கூறினார்கள். பொருள் : உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன், தீமையிலிருந்து விலகுவதும் நன்மையின் மீது ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத்தவிர வேறெவரையும் நாங்கள் வணங்கமாட்டோம். அருட்கொடைகள் அனைத்தும் அவனுடையதே. சிறப்பும் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன.
02

Explanation

இந்த மகத்தான திக்ரை ஒவ்வொரு கடமையான தொழுகைளிலும் ஸலாம் கொடுத்ததன் பின் ஓதி தஸ்பீஹ் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். இதன் கருத்து பின்வருமாறு :

'லாஇலாஹ இல்லல்லாஹு' என்ற வார்த்தை உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறுமில்லை என்பதைக் குறிக்கும்.

'வஹ்தஹு லா ஷரீகலஹு'அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, என்பது (இறைமைத்துவத்திலும்) உலூஹிய்யாவிலும், ருபூபிய்யாவிலும் பெயர்கள் மற்றும் பண்புகளிலும் தனித்துவமானவனாகவும், பிற படைப்புகளுடன் கூட்டுச்சேராதவனாகவும் உள்ளான் என்பதாகும்.

'லஹுல் முல்க்' வானங்கள் மற்றும் பூமி அதற்கிடைப்பட்ட அகன்று விரிந்த ஆட்சியதிகாரத்திற்கு சொந்தக்காரன் என்பதைக் குறிக்கும்.

'வலஹுல் ஹம்து' என்பது ஒட்டுமொத்தமான முழுமைத்துவத்தைப் பெற்றவன் இன்பத்திலும் துன்பத்திலும் மற்றும் எல்லா சூழ்நிலைகளிலும் நேசித்து போற்றி புகழத்தக்கவன் என்பதாகும்.

'வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' அவனின் சக்தியும், வல்லமையும் எல்லா வகையிலும் முழுமையானது, அவனுக்கு இயலாதது என்று ஒன்று கிடையாது, அனைத்தும் அவனுக்கு இயலுமான விவகாரங்களே என்பது இதன் பொருளாகும்.

' லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்' என்பது ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறிச்செல்லவதோ, அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் நிலையிலிருந்து அவனுக்கு கட்டுப்படும் நிலைக்குச் செல்வதற்குமான ஆற்றலைப் பெறுவது அல்லாஹ்வின் மூலமேயாகும், அவனே இதற்கு உதவிபுரிபவனாக உள்ளான். அவனின் மீதே எமது பொறுப்புகளை நாம் ஒப்படைக்கிறோம்.

' லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு' என்ற வாசகம் இணைவைத்தலை புறக்கணித்து உலூஹிய்யாவை வலியுறுத்துவதாக இது அமைந்துள்ளது. அவனைத் தவிர வணங்கி வழிபட தகுதி படைத்தவன் வேறு யாரும் கிடையாது.

'லஹுன்னிஃமது வலஹுல் பழ்லு' "அருளும் அருட்கொடைகளும் அவனுக்கே உரியன" என்பது அருள்களைப் படைத்து அதனை அவனே சொந்தமாக்கி கொள்வதோடு அவற்றை நாடிய அடியார்களுக்கு கொடுத்து கண்ணியப் படுத்துகிறான் என்பதாகும்.

' வலஹுஸ்ஸனாஉல் ஹஸன்' அழகிய பாராட்டும், புகழும்' அவனுக்கே உரியன என்பது இந்தப்பாராட்டு அவனின் தாத் -மெய்நிலை- மற்றும் அவனின் பண்புகள் செயற்பாடுகள் அருட்கொடைகள் மற்றும் எல்லா நிலைகளுக்குரித்தாகும்.

'லாஇலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன' என்பதன் கருத்து : அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் எவ்வித முகஸ்துதியோ, வெளிப்பகட்டோ இன்றி அல்லாஹ்வை மாத்திரம் நோக்காகக் கொண்டு தூய்மையைக் கடைப் பிடித்தலைக் குறிக்கிறது.

'வலவ் கரிஹல் காபிரூன்' அதாவது காபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ்வை ஏகத்துவப் படுத்தி அவனுக்கு வணக்கங்களை செலுத்துவதில் நிலைத்திருப்போம் என்பதாகும்.
03

Benefits

இந்த திக்ருகளை ஒவ்வொரு பர்ழான தொழுகைக்குப் பின்னரும் பேணி ஓதிவருவது விரும்பத்தக்கதாகும்.
காபிர்கள் வெறுத்த போதிலும், ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தைக் கொண்டே பெருமையடைந்து, அதன் அடையாளச் சின்னங்களை வெளிப்படுத்த வேண்டும்.
ஹதீஸில் 'துபரஸ்ஸலாத்' (தொழுகையின் பின்) என்ற வார்த்தை இடம் பெற்று குறிப்பிட்ட விடயம் ஒரு திக்ராக இருந்தால் அது ஸலாம் கொடுத்ததன் பின் ஒத வேண்டியது என்பதையும், அது ஒரு 'துஆ' பிரார்த்தனையாக இருப்பின் அது தொழுகையை முடிக்க முன் -ஸலாம் கொடுக்க முன்- ஒதவேண்டியது என்பதைக் குறிக்கும்.

Attribution

[இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

Categories

Share

Share hadeeth

Sharing options · 0 Total shares

Share

← Back to encyclopedia
Shopping Basket

Loading...