(நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து...' எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின்னர் 'ஸுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்பிர் லீ' (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : (நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து...' எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின்னர் 'ஸுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்பிர் லீ' (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை. ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் அதிகமாக 'ஸுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும் மஃக்பிர் லீ' (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறி வந்தார்கள்.
Explanation
Benefits
ஆயுளின் கடைசி நாட்களில் இஸ்திஃபார் செய்யுமாறு வேண்டப்பட்டிருப்பத்தல் இது ஒரு விடயத்தை உணர்த்துகிறது (இபாதத்தில் ) வணக்க வழிபாடுகளில் இடம்பெற்ற குறைகளை நிவர்த்தி செய்யும் முகமாக இபாதத்துக்களில் குறிப்பாக தொழுகையானது இஸ்திஃபாரின் மூலம் முடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு துஆவில் அல்லாஹ்வை புகழ்ந்து, துதிசெய்து எல்லா வகையான குறைகளை விட்டும் தூய்மைப்படுத்துவது மிகவும் சிறந்த வழியாகும்.
இஸ்திஃபார் செய்வதன் சிறப்பும் அது எல்லா சூழ்நிலைகளிலும் வலியுறுத்தப்பட்டிருப்பதும்.
நபி முஹம்மது ﷺ அவர்கள் அல்லாஹ்வுக்கான அடிமைத்தனத்தை முழுமையாக நிறைவேற்றியதும், அல்லாஹ்வின் கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடித்ததும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

