அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் 'எங்கள் இரட்சகனே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் 'திருப்தி அடைந்தீர்களா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள் 'உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?'
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, 'சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் 'எங்கள் இரட்சகனே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் 'திருப்தி அடைந்தீர்களா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள் 'உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் 'அதை விடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப் போகிறேன்' என்பான். அவர்கள் 'அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்கள்மீது என் அன்பை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன்' என்று கூறுவான்.
Explanation
Benefits
அல்லாஹ் சொர்க்கவாசிகளைப் பற்றி திருப்தி அடைந்து, அவர்களுக்குத் தன் மகிழ்ச்சியை அளித்து, மீண்டும் ஒருபோதும் அவர்கள் மீது கோபப்பட மாட்டான் என்ற நற்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளமை.
சொர்க்கவாசிகளின் பதவிகளிலும் அந்தஸ்துகளில் தர வேறுபாடுகள் இருப்பினும், அவர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதில் முழுமையாகத் திருப்தி அடைவார்கள். இதனால் அவர்கள் அனைவரும் ஒரே வார்த்தையில் : இறைவா உனது படைப்புகளில் எவருக்கும் கொடுக்காததை எமக்கு தந்தாய் என்று கூறுவார்கள்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

