நம்மிடமிருந்து ஒரு விடயத்தைக் கேட்டு, அதைக் கேட்டது போன்றே பிறருக்கு எத்திவைப்பருக்கு அல்லாஹ் செலிப்பை ஏற்படுத்துவானாக. அதை நேரடியாகக் கேட்டவரை விட எத்திவைக்கப்பட்டவர் அதிக அறிவுடையவராக இருக்கலாம்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: "நம்மிடமிருந்து ஒரு விடயத்தைக் கேட்டு, அதைக் கேட்டது போன்றே பிறருக்கு எத்திவைப்பருக்கு அல்லாஹ் செலிப்பை ஏற்படுத்துவானாக. அதை நேரடியாகக் கேட்டவரை விட எத்திவைக்கப்பட்டவர் அதிக அறிவுடையவராக இருக்கலாம்".
Explanation
ஏனெனில், ஒருவரிடம் ஹதீஸ் கொண்டு செல்லப்படும்போது, அதை கேட்கிறவர் அதை எடுத்துச் சென்றவரைவிட அதிகமாகப் புரிந்து கொள்ளக் கூடியவராகவும், ஆழமாக சிந்தித்து சட்டத் தீர்வுகளைப் பெறக் கூடியவராகவும் இருக்கலாம். இதனால், முதலாவது நபர் ஹதீஸைச் சரியாக மனப்பாடம் செய்து பரப்புவதில் திறமையுடையவராக இருப்பார்; இரண்டாவது நபர் அதை ஆழமாகப் புரிந்து அதிலிருந்து கருத்துகளை எடுத்துக்கொள்ளும் திறமையுடையவராக இருப்பார்.
Benefits
ஹதீஸ்துறையில் ஈடுபடுவோரின் சிறப்பும், அந்த அறிவைப் பயிலுவதின் மகத்துவமும்.
ஹதீஸ் வாசகங்களை ஆழ்ந்து புரிந்து சட்டத் தீர்வுகளை எடுக்கும் அறிஞர்களின் மேன்மை.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நேரடியாக ஹதீஸ்களை கேட்டு, அதை எமக்கு எத்தி வைத்தவர்கள் என்ற வகையில் ஸஹாபாக்களின் (ரழியல்லாஹு அன்ஹும்; சிறப்பையும் இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றமை.
இமாம் முனாவி அவர்கள் கூறுகிறார்: இதன் மூலம் ஹதீஸ் அறிவிப்பவருக்கு (ராவி) ஃபிக்ஹ் அறிவு இருக்க வேண்டும் என்பது கட்டாய நிபந்தனை அல்ல என்பதை விளக்குகிறது. அவருக்கான முக்கிய நிபந்தனை நன்கு மனப்பாடம் செய்திருப்பதே ஆகும். ஆனால் ஃபிக்ஹ் அறிஞரின் கடமை அதைப் புரிந்து கொண்டு ஆழ்ந்து சிந்தித்து அதன் கருத்துக்களை எடுப்பதாகும்.
ஸுஃப்யான் இப்னு உயைனா அவர்கள் கூறுகிறார்: 'ஹதீஸைப் பயிலும் யாராயினும், அந்த ஹதீஸின் காரணமாக அவரது முகத்தில் அழகும் செலுமையும்; நிறைந்திருக்கும்'.
முஹத்திஸ்களின் (ஹதீஸ்துறை அறிஞர்கள்) பார்வையில் மனனமிடுதல் இரண்டு வகைப்படும். இதயத்தில் பதிந்து பாதுகாத்தல் (வாய்மொழி நினைவாற்றல்), புத்தகத்தில் எழுதிப் பாதுகாத்தல். இந்த இரு வகையான பாதுகாப்பு முறைமையையும் ஹதீஸில் வரும் துஆ உள்ளடக்கிக் கொள்ளும்.
மக்களின் புரிதல் திறன் வித்தியாசமானது. சில நேரங்களில் செய்தியை எடுத்துச் செல்லும் ஒருவரைவிட அதை பெறும் ஒருவர் அதிகமாகப் புரிந்துகொள்ளக் கூடியவராக இருப்பார். சிலவேளை ஃபிக்ஹ் அறிவை பெற்றவர் ஃபகீஹ் சட்ட நிபுணராக (பகீஹாக) இருக்க மாட்டார்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

