உமது நாவு அல்லாஹ்வின் திக்ரில் திளைத்தவாறு இருக்கட்டும்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் கடமைகள் எம்மீது அதிகமாக உள்ளன. எனவே எமக்கு கடைப்பிடிப்பதற்கு இலகுவான அதிகமான நன்மைகளைப் பெற்றுத்தரக் கூடிய ஒன்றை அறிவித்துத் தாருங்கள் என்று கேட்டார் அதற்கு நபியவர்கள்: "உமது நாவு அல்லாஹ்வின் திக்ரில் திளைத்தவாறு இருக்கட்டும் "என்று கூறினார்கள். முஆஸ் இப்னு ஜபர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : இறுதியாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பிரிந்து செல்லும் தருனத்தில் நபியவர்களிடத்தில் : அமல்களில் மிகவும் சிறந்ததும் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானதும் எது ? என்று நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள் உமது நாவு அல்லாஹ்வின் திக்ரில் -இறைநினைவில்- திளைத்த நிலையில் மரணம் தழுவவேண்டும் என்று கூறினார்கள்.
Explanation
அப்போது நபியவர்கள், எல்லா நிலைகளிலும் தஸ்பீஹ், தஹ்மீத், இஸ்திக்பார், துஆ போன்றவற்றின் மூலம் எந்நேரமும் அல்லாஹ்வை நினைவுகூர்வதில் திளைத்திருக்கக் கூடியதாக அவரது நாவு இருக்கட்டும் என்று வழிகாட்டினார்கள்.
Benefits
நன்மைக்கான காரணிகளை இலகுபடுத்தியுள்ளமை அல்லாஹ்வின் பேருபகாரங்களில் ஒன்றாகும்.
நன்மை மற்றும் சிறப்பிற்கான வாயில்களில் அடியார்கள் வெவ்வேறான பங்குகளைக் கொண்டுள்ளனர்.
உளப்பூர்வமாக, தஸ்பீஹ், தஹ்மீத், தஹ்லீல், தக்பீர் போன்றவற்றின் ஊடாக நாவினால் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்வது, பல உபரியான வணக்கங்களுக்கு நிகராக இருக்கும்.
கேள்வி கேட்பவர்களின் நிலைகளைக் கவனித்து, ஒவ்வொருவருக்கும் பொருத்தமான பதிலை நபியவர்கள் வழங்கியுள்ளமை.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

