மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர எதனையும் அவன் ஏற்கமாட்டான். அல்லாஹ் தூதர்களுக்கு ஏவியதையே விசுவாசிகளுக்கும் ஏவினான்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் தூயவன், அவன் தூயவைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் தனது தூதர்களிடம் எதைச் செய்யும்படி கட்டளையிட்டானோ, அதையே நம்பிக்கையாளர்களையும் (முஃமின்களையும்) செய்யும்படி கட்டளையிட்டுள்ளான்." 'தூதர்களே! தூயவைகளிலிருந்தே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்' என்று கூறிய எல்லாம் வல்ல அல்லாஹ் ''நம்பிக்கையாளர்களே! நான் உங்களுக்குத் தந்துள்ளவற்றில் தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்'' என்றும் கூறியுள்ளான். பின்னர் பெருமானர் (ஸல்) அவர்கள் அதிக தூரம் பயணம் செய்த ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். தலைவிரிகோலமாக, மாசு படிந்தவராக அவர் தனது கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தி ' எனது இரட்டசகனே! எனது இரட்சகனே! என கதறுகிறார். ஆனால் அவர் தனது உணவைப் பெறும் வழி தடுக்கப்பட்டதாக (ஹராமானதாக) இருக்கின்றது, அவர் அருந்தும் பானம் தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது உடை தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது மொத்த வாழ்க்கையே ஹராமான வழியில் தான் இருக்கின்றது. இந்த நிலையில் அவர் எவ்வாறு இறைவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்க முடியும்!
Explanation
பின்பு நபியவர்கள் துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான பின்வரும் காரணிகளைப் பயன்படுத்தியும், அமல்களைப் பாழ்ப்படுத்தி, துஆ ஏற்றுக்கொள்ளப்படத் தடையாக இருக்கும், 'ஹராமாண உணவை' நபியவர்கள் எச்சரிக்கின்றார்கள்.
முதலாவதாக, ஹஜ், ஜிஹாத், உறவுகளை சேர்ந்து நடத்தல் போன்ற வணக்கங்களுக்காக நீண்ட பயணம் செய்தல்.
இரண்டாவதாக, தலைமுடியை வாராமல், பரட்டைத் தலையுடன், நிறம் மாறிய நிலையில், தனது ஆடைகளும் புழுதிபட்ட பட்டநிலையில் இருத்தல். எனவே இவர் ஒரு நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றார்.
மூன்றாவதாக, தனது இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, துஆக் கேட்டல்.
நான்காவதாக, அல்லாஹ்வின் பெயர்களை முன்னிறுத்தி, யா ரப்பு! யா ரப்பு! என மீண்டும் மீண்டும் கேட்டல்.
துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இவ்வாறான காரணங்கள் இருந்தும், அது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஏனெனில், அவனது உணவும், பானமும், ஆடையும் ஹராமாகும். அவன் ஹராமாலேயே ஊட்டப்பட்டுள்ளான். இவ்வாறான தன்மை உடையவர்களுக்கு பதிலளிக்கப்படுவதென்பது மிகத் தூரமானது. அவனுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படும்?
Benefits
அமல்களை அல்லாஹ்வுக்கென்று உளத் தூய்மையுடன், நபியவர்களைப் பின்பற்றிச் செய்யுமாறு ஏவப்பட்டுள்ளமை.
அமல்களை நோக்கி ஆர்வமூட்டும் அம்சங்களைப் பயன்படுத்தல். அதாவது, நபியவர்கள், 'நிச்சயமாக அல்லாஹ், தூதர்களுக்கு ஏவியதையே, விசுவாசிகளுக்கும் ஏவினான்.' என்று கூறுகின்றார்கள். எனவே, ஒரு முஃமின் இது ரஸூல்மார்களுக்கும் ஏவப்பட்ட ஒன்று என்பதை அறிந்துகொண்டால், அதை ஆர்வத்துடன், உறுதியாக நிறைவேற்றுவான்.
ஹராமானதை சாப்பிடுவது, துஆ ஏற்றுக்கொள்ளப்படத் தடையாக இருக்கும் காரணிகளில் ஒன்றாகும்.
ஐந்து அம்சங்கள் துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான காரணிகளாகும் : 1. நீண்ட பயணம் போதல். ஏனெனில், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான மிக முக்கிய காரணியாகிய, 'பலவீனப்படுதல்' அங்கு இருக்கின்றது. 2. நிர்ப்பந்த நிலை. 3. வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்துதல். 4. அல்லாஹ்வின் ருபூபிய்யாவைத் திரும்பத் திரும்ப பல தடவைகள் கூறிக் கேட்டல். துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகப் பயன்படுத்தமுடியுமான மிக முக்கியமான ஒன்றாக அது இருக்கின்றது. 5. உணவும், குடிபானமும் தூய்மையாக இருத்தல்.
ஹலாலான, தூய்மையான உணவை சாப்பிடுவது, நல்ல அமல்கள் செய்வதற்குத் துணையாக இருக்கும் காரணிகளில் ஒன்றாகும்.
காழீ இயாழ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : தூய்மையானது என்பது, அசுத்தமானது என்பதன் எதிர்மறையாகும். அது அல்லாஹ்வின் பண்பாகக் கூறப்பட்டால், அவன் குறைகளை விட்டுத் தூய்மைப் படுத்தப்பட்டவன், இயலாமைகளை விட்டும் பரிசுத்தமாக்கப்பட்டவன் என்ற கருத்தைத் தரும். ஓர் அடியானுக்குப் பண்பாகக் கூறப்பட்டால், கீழ்த்தரமான குணங்கள் மற்றும் அசிங்கமான செயல்களை விட்டும் நீங்கி, புகழத்தக்க குணங்களை உடையவன் என்ற கருத்தைத் தரும். அது சொத்துக்களுக்குப் பண்பாகக் கூறப்பட்டால், ஹலாலான, சிறந்த சொத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

