HadeethEnc · 1.36.0
'எல்லாம் வல்ல அல்லாஹ் சில மார்க்கக் கடமைகளை விதித்திருக்கின்றான். ஆகவே அவைகளை வீணடிக்காதீர்கள்; அவன் சில எல்லைகளை நிர்ணயித்திருக்கின்றான். ஆகவே அவற்றைக் கடந்து செல்லாதீர்கள். அவன் நமக்கு சிலவற்றை தடை செய்திருக்கின்றான். ஆகவே அவற்றை மீறிச்செல்லாதீர்கள்; சில விஷயங்களில் மறதியாக அன்றி,உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக அவன் மௌனமாக இருக்கின்றான். ஆகவே அவற்றைக் குறித்து தேட வேண்டாம்
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
அபூஸஃலபா அல் குஷனீ ஜுர்ஸூம் இப்னு நாஷிர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்; ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : 'எல்லாம் வல்ல அல்லாஹ் சில மார்க்கக் கடமைகளை விதித்திருக்கின்றான். ஆகவே அவைகளை வீணடிக்காதீர்கள்; அவன் சில எல்லைகளை நிர்ணயித்திருக்கின்றான். ஆகவே அவற்றைக் கடந்து செல்லாதீர்கள். அவன் நமக்கு சிலவற்றை தடை செய்திருக்கின்றான். ஆகவே அவற்றை மீறிச்செல்லாதீர்கள்; சில விஷயங்களில் மறதியாக அன்றி,உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக அவன் மௌனமாக இருக்கின்றான். ஆகவே அவற்றைக் குறித்து தேட வேண்டாம்.
02
Explanation
அல்லாஹ் சில விடயங்களை கடமையாக்கி அதனை கட்டாயப்படுத்தியுள்ளான். எனவே அவற்றைப் பின்பற்றுங்கள். அவற்றை பின்பற்றாது அலட்சியமாக இருப்பதன் மூலம் அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். அதே போன்று சில தடைகளை விதித்துள்ளான் அவை அல்லாஹ் விரும்பாதவைகளை விட்டும் உங்களை தடுக்கும். அதனால் இஸ்லாமிய ஷரீஆ வலியுறுத்தியதற்கு அப்பால் எதனையும் அதிகப்படுத்துவிடாதீர்கள் என்றும், அல்லாஹ் சில விடயங்களை தடைசெய்துள்ளான் அதனை செய்யவோ அதன் அருகே நெருங்கவோ வேண்டாம். இவை தவிர உள்ளவை யாவும் அல்லாஹ் தனது அடியார்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக அது குறித்து ஏதும் பேசாது விட்டுவிட்டான். எனவே அவை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதாகும் ஆகையால் அவற்றை தேட வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.
03
Benefits
இந்த ஹதீஸ, அல்லாஹ்வே சட்டங்களை இயற்றுபவன் அவனின் கையில்தான் முழு அதிகாரமும் உள்ளது என்பதற்கு ஆதாரமாகும்.
இந்த ஹதீஸ் சட்டங்களின் வரையரைகளான சட்டத்தின் தன்மை மற்றும் தீர்ப்பு தொடர்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. எனவே இஸ்லாமிய சட்டத்தின் தன்மை பொருத்தவரையில் : சட்டங்கள் குறிப்பிடப்படாதவை குறிப்பிடப்பட்டவை என்ற இரு பகுதிகள் உண்டு. சட்டங்களின் நிலையைப்பொருத்தவரை வலியுறுத்தப்பட்டது (வாஜிப்) அல்லது வரவேற்கத்தக்கது (நத்ப்) அல்லது தடைசெய்யப்பட்டது (ஹராம்) அல்லது வெறுக்கத்தக்கது ( மக்ரூஹ் அல்லது பொதுவாக அனுமதிக்கப்பட்டது (முபாஹ்) ஆகிய நிலைகளைக் கொண்டிருக்கும்.
குறித்தவிடயம் பற்றி அல்லாஹ் மௌனம் சாதித்தவை யாவும் கடமையென்றோ, தண்டனை உள்ளது என்றோ, தடுக்கப்பட்டது என்றே கூற முடியாது. அவை அனுமதிக்கப்பட்டதாகவே கொள்ள வேண்டும்.
நபியவர்களின் அழகிய விளக்கம். அதாவது நபியவர்கள் இந்த ஹதீஸில் மிகத்ததெளிவான முறையில் இஸ்லாமிய சட்டங்களைப் பிரித்துக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் கடமைகளை பேணிநடப்பது கடமையாகும்.
அல்லாஹ்வின் வரம்புகளை மீறி நடப்பது ஹராமாகும்.
இந்த ஹதீஸ் சட்டங்களின் வரையரைகளான சட்டத்தின் தன்மை மற்றும் தீர்ப்பு தொடர்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. எனவே இஸ்லாமிய சட்டத்தின் தன்மை பொருத்தவரையில் : சட்டங்கள் குறிப்பிடப்படாதவை குறிப்பிடப்பட்டவை என்ற இரு பகுதிகள் உண்டு. சட்டங்களின் நிலையைப்பொருத்தவரை வலியுறுத்தப்பட்டது (வாஜிப்) அல்லது வரவேற்கத்தக்கது (நத்ப்) அல்லது தடைசெய்யப்பட்டது (ஹராம்) அல்லது வெறுக்கத்தக்கது ( மக்ரூஹ் அல்லது பொதுவாக அனுமதிக்கப்பட்டது (முபாஹ்) ஆகிய நிலைகளைக் கொண்டிருக்கும்.
குறித்தவிடயம் பற்றி அல்லாஹ் மௌனம் சாதித்தவை யாவும் கடமையென்றோ, தண்டனை உள்ளது என்றோ, தடுக்கப்பட்டது என்றே கூற முடியாது. அவை அனுமதிக்கப்பட்டதாகவே கொள்ள வேண்டும்.
நபியவர்களின் அழகிய விளக்கம். அதாவது நபியவர்கள் இந்த ஹதீஸில் மிகத்ததெளிவான முறையில் இஸ்லாமிய சட்டங்களைப் பிரித்துக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் கடமைகளை பேணிநடப்பது கடமையாகும்.
அல்லாஹ்வின் வரம்புகளை மீறி நடப்பது ஹராமாகும்.
Attribution
[இதனை இமாம் அத்தாரகுத்னீ தனது ஸுனன் நூலிலும், ஏனையோரும் பதிவு செய்துள்ளனர்]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares

