அல்லாஹ்வுக்கு எந்த இணையையும் ஏற்படுத்த மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபச்சாரம் செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி வழங்குங்கள்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
பத்ரில் கலந்து கொண்ட ஒருவரான, மேலும், அகபா இரவில் நியமிக்கப்பட்ட பொறுப்புதாரிகளில் ஒருவரான, உபாதா இப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள், தமது தோழர்கள் தம்மைச் சூழாக இருக்கும் நிலையில் இவ்வாறு கூறினார்கள் : அல்லாஹ்வுக்கு எந்த இணையையும் ஏற்படுத்த மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபச்சாரம் செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி வழங்குங்கள். மேலும், உங்களது பிள்ளைகளைக் கொலை செய்யமாட்டீர்கள் என்றும், மேலும், உங்கள் கரங்கள் மற்றும் கால்களுக்கு இடையில் இருந்து இட்டுக்கட்டி, அவதூறுகளைக் கொண்டு வரமாட்டீர்கள் என்றும், நன்மையில் மாறு செய்ய மாட்டீர்கள் என்றும் (எனக்கு உறுதிமொழி வழங்குங்கள்) உங்களில் யார் (இதை) நிறைவேற்றுகின்றாரோ, அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. இவற்றில் ஏதாவதொன்றை யாராவது செய்து, பின்பு அல்லாஹ் அவரை மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளவர். அல்லாஹ் நாடினால், அவரை மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான். (இவ்வாறு நபியவர்கள் கூறிய பின்னர்) நாம் அதற்கு உறுதிமொழி வழங்கினோம்.
Explanation
Benefits
ஸின்தீ அவர்கள் கூறுகின்றார்கள் : 'நல்ல விடயங்களில்' என்ற நபியவர்களது வார்த்தையைப் பொறுத்தவரை, அவர்களது கட்டளைகள் அனைத்துமே நல்லவைதான். அதற்கு மாற்றமான ஒன்று நடக்கவே வாய்ப்பில்லை (என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.) எனவே, 'நல்ல விடயங்களில்' என்ற நபியவர்களது வார்த்தை, கட்டுப்படுதல் கடமை என்பதற்கான காரணத்தையும், நன்மையற்ற விடயங்களில் படைப்புக்களுக்குக் கட்டுப்பட முடியாது என்பதையும், உறுதிமொழியின் (பைஅத்தின்) போது கட்டுப்படுதல் என்பது நல்லவற்றில் தான் என்ற நிபந்தனையை இடுவது கட்டாயம் என்பதையும் உணர்த்தவாகும்.
முஹம்மத் இப்னு இஸ்மாஈல் மற்றும் பலர் கூறுவதாவது : பிள்ளைகளைக் கொலை செய்வதைக் குறித்துக் காட்டப்பட்டுள்ளமைக்கான காரணம், அது கொலையாகவும், உறவுகளைத் துண்டிப்பதாகவும் இருப்பதாகும். எனவே, அதைத் தடுப்பதில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது. பெண்பிள்ளைகளை உயிருடன் புதைத்தல், ஆண்மக்களை வறுமையைப் பயந்து கொலை செய்தல் ஆகியவை அவர்களிடம் பரவலாகக் காணப்பட்டன. அல்லது அவர்கள் குறிப்பாகச் சொல்லப்பட்டமைக்கான காரணம், அவர்கள் தம்மைக் காத்துக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதாகும்.
நவவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இந்த ஹதீஸ் உணர்த்தும் பொதுக் கருத்து, 'நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான்' எனற அல்குர்ஆனிய வசனத்தினால் வரையறுக்கப்படுகின்றது. ஏனெனில், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவன், அதற்காகக் கொலைசெய்யப்பட்டால், அவ்வாறு கொலை செய்யப்படுவது அதற்கான குற்றப் பரிகாரமாக அமையமாட்டாது.
காழி இயாழ் அவர்கள் கூறுகின்றார்கள் : குற்றவியல் தண்டனைகள், பாவங்களுக்கான குற்றப்பரிகாரம் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

