யார் رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும். (பொருள் : நான் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் பொருந்திக் கொண்டு விட்டேன்.)
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யார் رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும். (பொருள் : நான் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் பொருந்திக் கொண்டு விட்டேன்.)
Explanation
Benefits
அல்லாஹ்வை ரப்பாகப் பொருந்திக் கொள்வதென்பது, ஓர் அடியான் அவனைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்பதைப் பொதிந்துள்ளது.
முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும், தூதராகவும் பொருந்திக் கொள்வதென்பது, அவர்களுக்கு வழிப்படுவதையும், அவர்களது ஸுன்னாவுக்குக் கட்டுப்படுவதையும் உள்ளடக்கிக் கொள்ளும்.
இஸ்லாமை மார்க்கமாகப் பொருந்திக் கொள்வதென்பது, அல்லாஹ் தனது அடியார்களுக்காக தெரிவு செய்துள்ளதைப் பொருந்திக் கொள்வதாகும்.
வேறு சில அறிவிப்புக்களில் வந்துள்ள பிரகாரம், அதானில் ஷஹாதாவுடைய வார்த்தையைக் கேட்கும் போது, இந்த துஆவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
வேறு ஒரு ஹதீஸில் இந்த துஆவைக் காலை, மாலையில் ஓதுவது விரும்பத்தக்கது என்றும் வந்துள்ளது.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

