நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் 'முப்லிஸ்' என்றால் யார் தெரியுமா?
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் 'முப்லிஸ்' என்றால் யார் தெரியுமா?.' என்று கேட்டார்கள்?. அதற்கு தோழர்கள் 'திர்ஹமோ, சொத்துக்களோ இல்லாதவன்' என்று பதில் அளித்தார்கள், அப்போது நபியவர்கள்; 'எனது உம்மத்தில் வங்குரோத்துக்காரன் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வருவான், அவனோ ஒருவனுக்கு ஏசியவனாக, இட்டுக் கட்டியவனாக, ஒருவனின் சொத்தை அநியாயமாக சாப்பிட்டவனாக, ஒருவனின் இரத்தத்தை ஓட்டியவனாக, ஒருவனுக்கு அடித்தவனாக வருவான்,, அப்போது பாதிக்கப் பட்டவனுக்கு அநியாயம் இழைத்தவனின் நன்மைகள் பங்கு வைக்கப்படும், நன்மைகள் முடியும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவனின் தீமைகளை எடுத்து அநியாயம் இழைத்தவனின் மீது சுமத்தப்பட்டு, பின்பு அநியாயம் இழைத்தவன் (தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வந்தவன்) நரகில் வீசப்படுவான். (முஸ்லிம்)
Explanation
Benefits
அடியார்களுக்கிடையிலான உரிமைகள் பேசித்தீர்த்தல் விட்டுக்கொடுத்தல் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அடிப்படையாகும். ஆனால் ஷிர்க் தவிர, அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியானுக்கும் இடையிலான கடமைகள் தொடர்பான விஷயங்களில் மன்னித்தல் என்பதே அடிப்படையாகும்.
குறிப்பாக பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான விவகாரங்களில் உரையாடலின் போது, கேட்பவரின் கவனத்தை ஈர்த்தல் மற்றும் அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
உண்மையில் வங்குரோத்துக்காரர் (திவாலானவர்) யார் என்பதற்கான விளக்கம் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மையான வங்குரோத்து நிலை என்பது, ஒருவரால் அநீதிக்கு ஆளானவர்கள், மறுமை நாளில் தங்களுக்கு அநீதி இழைத்தோரின் நற்செயல்களை பெறுவதாகும்.
மறுமை நாளில்,படைப்புகளுக்கு இடையேயான பழிவாங்கலின் போது, சிலரின் அனைத்து நன்மைகளும் பறிக்கப்படும்,இறுதியில், அவனிடம் எந்த நன்மையும் இல்லாத ஒரு நிலையை அவன் அடையக்கூடும்.
அல்லாஹ் தனது படைப்புகளை கையாள்வது நீதி மற்றும் உண்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

