'யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் தங்குவதற்காக இறங்கி பின்னர் 'அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்' (பொருள் : அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்துப் படைப்புகளின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூறிப் பிரார்த்தித்தால், தங்கிய அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது'
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதைதான் செவிமடுத்ததாக கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா அவர்கள் அறிவிக்கிறார்கள். 'யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் தங்குவதற்காக இறங்கி பின்னர் 'அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்' (பொருள் : அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்துப் படைப்புகளின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூறிப் பிரார்த்தித்தால், தங்கிய அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது'.
Explanation
Benefits
படைப்புகளிடத்தில் தனது இடர்களுக்கு பாதுகாவல் கோருவது ஷிர்க் -இணைவைப்பாகும், இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் வார்த்தைகள் அவனின் பண்புகளின் ஒன்றாக இருப்பதால் அதனைக் கொண்டு பாதுகாவல் தேடுவது அனுமதிக்கப் பட்டிருத்தல்.
இந்த துஆவின் சிறப்பும் இதனால் கிடைக்கும் பரகத்தும் தெளிவு படுத்தப்பட்டுள்ளமை.
'அஸ்கார்கள்' -நபியவர்கள் கற்றுத்தந்த திக்ர்கள் மூலம் பாதுகாப்புத் தேடுவதானது அடியான் தீங்குகளிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும்.
அல்லாஹ் அல்லாத ஜின் சூனியக்காரர்கள், போலி ஆன்மீக வாதிகள் போன்றோரிடம் பாதுகாப்புத் தேடிச்செல்வது இஸ்லாமிய மார்க்கத்தில் சட்டபூர்வமற்றது என்பதை தெளிவுபடுத்தல்.
ஊரில் அல்லது பிரயாணத்தில் ஓரிடத்தில் தங்கும் ஒருவர் இந்தப் பிரார்த்தனையை ஓதுவது மார்க்க வழிகாட்டலாகும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

