நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகள் இருக்கின்றன.மேலும் நீங்கள் உங்கள் ஆத்மாவுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகளும்,உங்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய சில உரிமைகளும் இருக்கின்றன.எனவே அனைவரின் உரிமைகளையும் அவரவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அபூ ஜுஹைபா வஹ்ப் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:ஸல்மான் மற்றும் அபூ தர்தா ஆகிய இருவருக்குமிடையில் ரஸூல் (ஸல்) அவர்கள் சகோதரத்துவ உரவொன்றை ஏற்படுத்தி வைத்தார்கள்.எனவே ஸல்மான்,அபூ தர்தாவைத் தரிசிக்கச் சென்ற சமயம் உம்முதர்தா அவர்கள் கசங்கிய ஆடை ஒன்றை அணிந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.எனவே அவர்,அவரிடம்"இது வென்ன உங்களின் கோலம்?' என்றா்கள்.அதற்கு அவர்"உங்களின் சகோதரன் அபூ தர்தாவுக்கு உலக விடயத்தில் எந்தத் தேவையும் இல்லையே"என்றார்கள்.அப்பொழுது அபூ தர்தா வந்து விட்டார்.அவ்வமயம் அவர்அ,வருக்காக உணவு தயார் செய்து"நானோ நோன்பாளி ஆகையால் நீங்கள் உண்ணுங்கள்"என்றார் அதற்கு அவர் நீங்கள் உண்ணும் வரையில் நான் உண்ணமாட்டேன்"என்றார்.எனவே அவர் சாப்பிடலானார்.இரவு நேரம் ஆனதுவும் தொழுவதற்காக அபூ தர்தா எழுந்தார்.அப்பொழுது அவரிடம் ஸல்மான் நீங்கள் நித்திரை செய்யுங்கள் என்றார்.எனவே அவர் நித்திரை கொள்ளலானார்.பின்னர் தொழுவதற்காக அவர் எழுந்தார்.எனவே அவரிடம் நீங்கள் உரங்குங்கள் என்று ஸல்மான் கூறினார்.பின்னர் இரவின் இறுதிப் பகுதி ஆகியதும் இப்பொழுது எழுந்திருங்கள் என்றார் ஸல்மான்.அதன் பின்னர் இருவரும் தொழுதனர்.அதனையடுத்து அவரிடம் ஸல்மான்"நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகள் இருக்கின்றன.மேலும் நீங்கள் உங்கள் ஆத்மாவுக்கு வழங்க வேண்டிய சில உரிமைகளும்,உங்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய சில உரிமைகளும் இருக்கின்றன.எனவே அனைவரின் உரிமைகளையும் அவரவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்" என்றார்கள்.பின்னர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்த அபூ தர்தா அன்னாரிடம் இதைப் பற்றிக் கூறினார்கள்.அதற்கு நபியவர்கள் "ஸல்மான் சொன்னது உண்மை" என்றார்கள்.
Explanation
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

