அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுஜுதில் 'அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு' என்று கூறுவார்கள். இதன் பொருள் : யாஅல்லாஹ்! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுஜுதில் 'அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு' என்று கூறுவார்கள்.
இதன் பொருள் : யாஅல்லாஹ்! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக.
Explanation
Benefits
சிறிய பாவம் (الدق)' அத்திக்கு' ஆரம்பமாகக் குறிப்பிடப்பட்டதற்கான காரணம் : துஆ செய்பவர் தன் வேண்டுகோளில் சிறியதிலிருந்து பெரியதிற்கு படிப்படியாக உயர்ந்து செல்கிறார் என்பதாகும். பெரும்பாலான நேரங்களில், சிறிய பாவங்களை அலட்சியமாக செய்வதாலும் அதில் தொடர்ச்சியாக இருப்பதினாலும் பெரிய பாவங்கள் உருவாகின்றன. ஆகவே, பெரிய பாவங்களுக்கு வழிவகுக்கும் சிறிய பாவங்கள் முதலில் குறிப்பிடப்பட்டன. அந்த வகையில் பெரிய பாவத்திற்கு வழிவகுக்கின்றவற்றை முதலில் குறிப்பிடுவதே பொருத்தமாகும்.
அல்லாஹ்விடம் சிறிய மற்றும்; பெரிய மற்றும் எல்லா பாவங்களிலிருந்தும் மனமார வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். அத்துடன் துஆ செய்வதில் பணிவும், தாழ்மையும் இருக்க வேண்டும்.
இமாம் நவவி (رحمه الله) அவர்கள் : இங்குள்ள சில வார்த்தைகள் மற்றவற்றுக்குப் பயன்படா விட்டாலும், பிரார்த்தனையை உறுதிப்படுத்தும் பல வார்த்தைகள் இங்கே உள்ளன என குறிப்பிடுகிறார்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

