HadeethEnc · 1.36.0
ஒரு முஸ்லிம் பாவகாரியத்திற்காகவோ உறவுகளை துண்டிக்கும் வகையிலோ அன்றி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்ற போது அவனின் பிரார்த்தனை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது அல்லது அப்பிரார்த்தனை மறுமையில் கூலி வழங்குவதற்காக சேமித்து வைக்கப்படுகிறது, அல்லது அவன் கேட்ட பிரார்த்தனைக்கு நிகரான தீங்கிலிருந்து அவனுக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. இம்மூன்று விடயங்களில் ஏதாவது ஒன்றை நிச்சயமாக அவனின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் பிரதிபலனாக வழங்குகிறான் என்று கூறிய போது நபித்தோழர்கள் அவ்வாறாயின் நாம் அதிகம் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஆம் அதிகமாக இறைஞ்சுங்கள்) அல்லாஹ் மிக அதிகமாக வழங்குபவன் என்று கூறினார்கள்
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு முஸ்லிம் பாவகாரியத்திற்காகவோ உறவுகளை துண்டிக்கும் வகையிலோ அன்றி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்ற போது அவனின் பிரார்த்தனை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது அல்லது அப்பிரார்த்தனை மறுமையில் கூலி வழங்குவதற்காக சேமித்து வைக்கப்படுகிறது, அல்லது அவன் கேட்ட பிரார்த்தனைக்கு நிகரான தீங்கிலிருந்து அவனுக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. இம்மூன்று விடயங்களில் ஏதாவது ஒன்றை நிச்சயமாக அவனின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் பிரதிபலனாக வழங்குகிறான் என்று கூறிய போது நபித்தோழர்கள் அவ்வாறாயின் நாம் அதிகம் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஆம் அதிகமாக இறைஞ்சுங்கள்) அல்லாஹ் மிக அதிகமாக வழங்குபவன் என்று கூறினார்கள்
02
Explanation
பாவம் செய்வதற்கும் அநியாயம் இழைக்கவும் இலகுபடுத்தி தருமாறு பிரார்த்தித்தல் அல்லது தனது குழந்தைகள் மற்றும் உறவுகளை துண்டித்து வாழ்வதற்கு அவர்களுக்கு எதிராக பிராரத்தனை செய்தல் போன்ற பாவமான ஒன்றை ஒரு முஸ்லிம் கேட்காது அல்லாஹ்விடம் பிராரத்தனை செய்தால் அவருக்கு அல்லாஹ் பின்வரும் மூன்று விடயங்களில் ஒன்றை நிச்சயம் வழங்குவான்: ஒன்று : அவன் பிரார்த்தனையை உடனே ஏற்று, அவன் கேட்டதை அவனுக்கு வழங்குவான். அல்லது அவனது அந்தஸ்த்தை உயர்த்துவதன் மூலம், அல்லது அவனுக்கு கருணை காட்டி, அவன் பாவங்களை மன்னிப்பதன் மூலம் மறுமை நாள் வரை அவனது கூலியை தாமதப்படுவான். அல்லது இவ்வுலகில் பிரார்த்தனையின் அளவுக்குச் சமமாக அவனிடமிருந்து தீமையைத் தடுப்பான். அப்போது ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம், எனவே இந்த சிறப்புகளில் ஒன்றை நாம் அடையும் பொருட்டு, நாம் அதிகமாக பிரார்த்தனை செய்வோம் எனக் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் நீங்கள் கேட்பதை விட அல்லாஹ்விடம் இருப்பது அதிகமானது, மற்றும் மகத்தானது, அவனுடைய அருளும் முடிவற்றது என்று கூறினார்கள்:
03
Benefits
ஒரு முஸ்லிமின் பிரார்தனையானது உரிய நிபந்தனைகளையும் ஒழுக்கங்களையும் உள்ளடக்கியதாக இருந்தால் அவனின் பிராரத்தனை ஏற்றுக்கொள்ளப்படும். ஆகையால் ஒரு அடியான் அதிகம் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். பிரார்தனை உடனே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அவசரப்படுதல் கூடாது.
ஒருவர் பிராத்தனையின் மூலம்; அவரால் கோரப்பட்ட விடயங்கள் மாத்திரம் கிடைக்கப் பெறும் என்ற வரையரை கிடையாது. சிலவேளை அவரின் பாவம் மன்னிக்கப்படலாம் அல்லது அந்தப் பிரார்த்தனைக்குரிய வெகுமதி மறுமைக்காக சேமிக்கப்படலாம்.
இப்னுபாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (பிரார்த்தனை செய்வதில்) இரைஞ்சிக் கேட்டல், சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருத்தல், ஒருபோதும் விரக்தியடையாமல் இருத்தல் ஆகியவை பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான முக்கிய காரணங்களாகும். எனவே ஒவ்வொருவரும் தமது பிரார்த்தனை வலியுறுத்திக் கேட்பதோடு; சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அல்லாஹ் ஞானமுள்ளவன், யாவற்றையும் அறிந்தவன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவன் ஏதோ ஒரு நோக்கத்தின் அடிப்டையில் பிரார்த்தனையை விரைவாக ஏற்றுக் கொள்ளலாம், அல்லது தாமதப்படுத்தலாம், அல்லது ஏதோ நோக்கத்தின் அடிப்டையில் பிரார்தனை புரிபவர் கேட்டதை விட சிறப்பானதை கொடுக்கலாம். இவையெல்லாம் அல்லாஹ்வின் ஞானத்துடன் தொடர்பான விடயங்களாகும்.
ஒருவர் பிராத்தனையின் மூலம்; அவரால் கோரப்பட்ட விடயங்கள் மாத்திரம் கிடைக்கப் பெறும் என்ற வரையரை கிடையாது. சிலவேளை அவரின் பாவம் மன்னிக்கப்படலாம் அல்லது அந்தப் பிரார்த்தனைக்குரிய வெகுமதி மறுமைக்காக சேமிக்கப்படலாம்.
இப்னுபாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (பிரார்த்தனை செய்வதில்) இரைஞ்சிக் கேட்டல், சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிருத்தல், ஒருபோதும் விரக்தியடையாமல் இருத்தல் ஆகியவை பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான முக்கிய காரணங்களாகும். எனவே ஒவ்வொருவரும் தமது பிரார்த்தனை வலியுறுத்திக் கேட்பதோடு; சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அல்லாஹ் ஞானமுள்ளவன், யாவற்றையும் அறிந்தவன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவன் ஏதோ ஒரு நோக்கத்தின் அடிப்டையில் பிரார்த்தனையை விரைவாக ஏற்றுக் கொள்ளலாம், அல்லது தாமதப்படுத்தலாம், அல்லது ஏதோ நோக்கத்தின் அடிப்டையில் பிரார்தனை புரிபவர் கேட்டதை விட சிறப்பானதை கொடுக்கலாம். இவையெல்லாம் அல்லாஹ்வின் ஞானத்துடன் தொடர்பான விடயங்களாகும்.
Attribution
[இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares

