HadeethEnc · 1.36.0
''இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப்பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப்பின்) கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்'
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரழி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை) ஏற்படுத்திக்கொண்டு) அமர்ந்திருந்தேன். (ஒருமுறை) அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ''இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப்பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப்பின்) கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்;?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ''அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறை வேற்றுங்கள்). அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் அல்லாஹ் விசாரிப்பான்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
02
Explanation
குடிமக்களின் விவகாரங்களை தலைவர்களும், அதிகாரிகளும் நிர்வகிப்பது போன்று பனூ இஸ்ராஈல்களின் விவகாரங்களை நபிமார்கள் நிர்வகித்து வந்தனர். அவர்களிடம் சீர்கேடுகள் தோன்றும் போதோல்லாம் அவர்களின் விவகாரங்களை சீர்செய்வதற்கும் அவர்கள் மாற்றிய சட்டதிட்டங்களை நீக்குவதற்காகவும்; நபிமார்களை அனுப்பினான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். ஆனால் என் உம்மத்திற்காக இதைச் செய்ய எனக்குப் பிறகு எந்த தீர்க்கதரிசியும் வரமாட்டார். எனக்குப் பிறகு, ஏராளமான கலீஃபாக்கள் இருப்பார்கள், அவர்களிடையே வேறுபாடுகளும் மோதல்களும் எழும். எனினும் எனக்குப்பின்னால் அதிகமான கலீபாக்கள் தோன்றி அவர்கள் மனிதர்களை ஆட்சி புரிவார்கள்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறிய போது 'உங்களுக்குப்பின்னர் கலீபாக்கள் அதிகரித்து விட்டால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விடுமே. அப்படியாயின் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தாங்கள் நம்மைப் பணிக்கின்றீர்கள்' என ஸஹாபாக்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வினவினர். ஒரு கலீஃபா இருக்கும் நிலையில்
இன்னொருவருவருக்கு பைஅத் (சத்தியப் பிரமாணம்) பைஅத் செய்தால் முதல் கலீஃபாவிற்கான விசுவாசம் செல்லுபடியாகும், அதைக் கடைப்பிடிக்க வேண்டும், அதே நேரத்தில் இரண்டாவது கலீஃபாவிற்கான பைஅத் விசுவாசப் பிரமாணம் பாதிலாகும். (செல்லுபடியாக மாட்டாது) அவ்வாறு செயவது தடைசெய்யப்பட்டுள்ளது. கலீஃபாக்களுக்கான உரிமையை வழங்கி நிறைவேற்றுங்கள், அவர்களைப் பின்பற்றுங்கள். குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரணாக இல்லாத விடயங்களில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடங்கள். ஏனென்றால் உங்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து அல்லாஹ் அவர்களை மறுமையில் விசாரிப்பான்.
இன்னொருவருவருக்கு பைஅத் (சத்தியப் பிரமாணம்) பைஅத் செய்தால் முதல் கலீஃபாவிற்கான விசுவாசம் செல்லுபடியாகும், அதைக் கடைப்பிடிக்க வேண்டும், அதே நேரத்தில் இரண்டாவது கலீஃபாவிற்கான பைஅத் விசுவாசப் பிரமாணம் பாதிலாகும். (செல்லுபடியாக மாட்டாது) அவ்வாறு செயவது தடைசெய்யப்பட்டுள்ளது. கலீஃபாக்களுக்கான உரிமையை வழங்கி நிறைவேற்றுங்கள், அவர்களைப் பின்பற்றுங்கள். குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரணாக இல்லாத விடயங்களில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடங்கள். ஏனென்றால் உங்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து அல்லாஹ் அவர்களை மறுமையில் விசாரிப்பான்.
03
Benefits
மக்களை நேரான பாதையில் வழிநடத்தவும், அவர்களின் விவகாரங்களை நிர்வகிக்கவும் ஒரு நபி அல்லது ஒரு கலீபா இருப்பது அவசியமாகும்.
எங்கள் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் எந்த நபியும் கிடையாது. (அவரே மனித குலத்தின் இறுதி நபியாவார்).
சட்டரீதியாக அதிகாரத்தை பெற்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சி செய்வது கண்டிக்கப்பட்டிருத்தல்.
ஒரே நேரத்தில் இரண்டு ஆட்சியாளர்களுக்கு சத்தியப் பிரமாணம் -உறுதி மொழி- அளிப்பது கூடாது.
ஆட்சியாளரின் பொறுப்பின் கனதி குறிப்பிடப்பட்டுள்ளமை. அதாவது ஆட்சியாளர் தனது குடிமக்கள் குறித்து மறுமையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'உலக விஷயங்களை விட மார்க்க விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் ஆட்சியாளருக்குக்குரிய கடமையை முழுமையாக நிறைவேற்ற உத்தரவிட்டார்கள்; ஏனெனில் மார்க்கத்தின் வார்த்தையை உயர்த்துவதற்கும், குழப்பம் மற்றும் தீமையைத் தடுப்பதற்கும் அது அவசியம். ஆனால் அவர் தனது உரிமைகளைக் கோருவதை தாமதப்படுத்தவும் உத்தரவிட்டார்; ஏனெனில் இதன் காரணமாக அவர் தனது உரிமைகளை இழக்க மாட்டார். மாறாக, அல்லாஹ் அவரைக் காப்பாற்றுவதாக அவருக்கு வாக்குறுதி அளித்துள்ளான். அல்லாஹ் அவரிடம் உள்ளதை முழுமையாகக் கொடுப்பான், அது மறுமையில் இருந்தாலும் கூட.'
இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் அறிகுறிகளில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு பல-அதிகமான- கலீஃபாக்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில், நல்லோரும் இருந்துள்ளனர், தீயோரும் இருந்துள்ளனர்.
எங்கள் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் எந்த நபியும் கிடையாது. (அவரே மனித குலத்தின் இறுதி நபியாவார்).
சட்டரீதியாக அதிகாரத்தை பெற்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சி செய்வது கண்டிக்கப்பட்டிருத்தல்.
ஒரே நேரத்தில் இரண்டு ஆட்சியாளர்களுக்கு சத்தியப் பிரமாணம் -உறுதி மொழி- அளிப்பது கூடாது.
ஆட்சியாளரின் பொறுப்பின் கனதி குறிப்பிடப்பட்டுள்ளமை. அதாவது ஆட்சியாளர் தனது குடிமக்கள் குறித்து மறுமையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'உலக விஷயங்களை விட மார்க்க விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் ஆட்சியாளருக்குக்குரிய கடமையை முழுமையாக நிறைவேற்ற உத்தரவிட்டார்கள்; ஏனெனில் மார்க்கத்தின் வார்த்தையை உயர்த்துவதற்கும், குழப்பம் மற்றும் தீமையைத் தடுப்பதற்கும் அது அவசியம். ஆனால் அவர் தனது உரிமைகளைக் கோருவதை தாமதப்படுத்தவும் உத்தரவிட்டார்; ஏனெனில் இதன் காரணமாக அவர் தனது உரிமைகளை இழக்க மாட்டார். மாறாக, அல்லாஹ் அவரைக் காப்பாற்றுவதாக அவருக்கு வாக்குறுதி அளித்துள்ளான். அல்லாஹ் அவரிடம் உள்ளதை முழுமையாகக் கொடுப்பான், அது மறுமையில் இருந்தாலும் கூட.'
இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் அறிகுறிகளில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு பல-அதிகமான- கலீஃபாக்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில், நல்லோரும் இருந்துள்ளனர், தீயோரும் இருந்துள்ளனர்.
Attribution
[இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares

