افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم. افتتاح البرنامج الدعوي السبت القادم، ٩ / ٣ / ١٤٤٨هـ بعد صلاة الفجر مباشرة مسجد محمد بن إبراهيم، الجامعة الإسلامية بالمدينة المنورة فضيلة الشيخ د. هيثم بن محمد سرحان دورة اليوم الواحد، وختم كتاب كل سبت بإذن الله حياكم الله ونفع بكم.
#4563[சரியானது]
HadeethEnc · 1.36.0

'இஸ்லாம் என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது இறைவனின் தூதர் என்றும் சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறை வேற்றுவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் செய்வது இவைகளாகும்

Available translations

Choose an available translation of this Hadeeth

01

Hadeeth text

உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : ஒரு நாள் நாங்கள் எல்லோரும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது வெண்ணிற ஆடையும், கரு நிற முடியும் கொண்ட ஒரு மனிதர் எங்கள் முன் வந்து நின்றார். பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் தென்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களின் முழங்கால்களுடன் சேர்த்தும், இரு கைகளைக் தனது கால்களின் மீது வைத்தும் அமர்ந்தார். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களை நோக்கி 'முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்கள் 'இஸ்லாம் என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது இறைவனின் தூதர் என்றும் சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறை வேற்றுவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். அவர் கேள்வி கேட்பதும் அதனை அவரே உண்மைப்படுத்துவதும் எம்மை ஆச்சரியத்திற்குற் படுத்தியது. பின்னரவர் 'ஈமான் குறித்து எனக்குச் சொல்லுங்கள்' என்றார். 'அது அல்லாஹ்வின் மீதும் அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்றும் நம்புவதுமாகும்' என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பதில்
கூற, இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். தொடர்ந்து அவர் 'இஹ்ஸான் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். 'நீங்கள் அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போன்று வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்' எனச் சொன்னார்கள். பின்னர் அவர் 'எனக்கு நியாயத் தீர்ப்பு நாள் குறித்துச் சொல்லுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'இந்தக் கேள்வியைக் கேட்பவரை விட கேட்கப்படுபவர் அதிகமாக அறிந்தவர் அல்லர்' என்றார்கள். (அதாவது அல்லாஹ் மாத்திரமே அதன் நேரத்தை அறிவான்). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகளில்லாத, முறையான ஆடைகளற்ற, வறியவர்களான ஆடுமேய்ப்போர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள்' என்றார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றுவிட்டார். நான் அங்கேயே சிறிது நேரம் தாமதித்தேன். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உமரே! கேள்வி கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்' என்றேன் நான். நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்' என்று கூறினார்கள்.
02

Explanation

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யாருக்கும் அறிமுகமில்லாத ஒரு மனிதரின் தோற்றத்தில் ஸஹாபாக்களிடம் வருகை தந்தார் என உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். அவரின் ஆடை கடுமையான வெண்மையும், தலை முடி கடுமையான கரு நிறமும் கொண்டதாக இருந்தது. அத்துடன் பயணம்செய்தவரிடம் காணப்படும் களைப்பு, தூசுபடிதல், முடிபரந்திருத்தல், ஆடை அழுக்காக இருத்தல் போன்ற அடையாளங்கள் எதுவும் அவரிடம் தென்படவில்லை. நபியவர்களிடம் சமூகம் தந்து அமர்ந்திருந்தோர் யாரும் அவரை தெரிந்திருக்கவுமில்லை. வந்தவர் நேரே நபியவர்களிடம் சென்று மாணவன் ஒருவன் அமரும் முறையில் நபியவர்களிடம் அமர்ந்து இஸ்லாம் பற்றி வினவினார். அதற்கு நபியவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் ஏற்று சாட்சி கூறுதல், ஐவேளைத் தொழுகைகளை பேணித் தொழுதல், ஸகாத்தை உரியவர்களுக்கு வழங்குதல், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல், சக்தியுள்ளோர் ஹஜ்ஜை நிறைவேற்றல் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதே இஸ்லாம் எனப் பதிலளித்தார்கள்.

உடனே கேள்வி கேட்டவர் நீங்கள் உண்மை சொன்னீர்கள் எனக் கூறினார். தனக்குத் தெரியாததைக் குறித்து கேட்டுவிட்டு பின்னர் அதனை உண்மைப்படுத்துவது ஸஹாபாக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து ஈமான் குறித்து வினவினார். அதற்கு நபியர்கள் ஈமான் உள்ளடக்கியிருக்கும் ஆறு அம்சங்களையும் குறிப்பிட்டார்கள். முதாலாவது : அல்லாஹ்வின் இருப்பையும் அவனின் பண்புகளையும் விசுவாசித்தல், படைத்தல் போன்ற விடயத்தில் அவனை ஒருப்படுத்துதல், வணக்கத்தை அவனுக்கு மாத்திரம் செலுத்துதல். இரண்டாவது : ஒளியினால் படைக்கப்பட்டடுள்ள மலக்குகள் அல்லாஹ்வின் கண்ணியமிக்க அடியார்கள், அவர்கள் ஒரு போதும் அல்லாஹ்விற்கு மாறு செய்யமாட்டார்கள், அவனின் கட்டளைப்பிரகாரமே செயற்படுவர்கள் என்ற மலக்குமார்களை ஈமான் கொள்வது. மூன்றாவது : அல்லாஹ்வினால் இறைத்தூதர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களான அல் குர்ஆன் இன்ஜீல் தவ்ராத் போன்றவற்றை ஈமான் கொள்வது. நான்காவது : அல்லாஹ்விடமிருந்து அவ்வேதங்களையும் மார்க்கத்தையும் பெற்று அவற்றை எத்திவைத்த தூதுவர்களான நூஹ், இப்ராஹீம் மூஸா ஈஸா அலைஹிமுஸ்ஸலாம், இறுதித்தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆகியோரையும் ஏனைய நபிமார்களையும் விசுவாசித்தல். ஐந்தாவது : மறுமை நாளை ஈமான் கொள்வது, இதில் மரணத்திற்கு பின்னுள்ள மண்ணறை மறை வாழ்வையும், மனிதன் மரணத்தின் பின் விசாரிக்கப்பட்டு ஒன்றில் சுவர்க்கம் அல்லது நரகம் செல்வான் என்பதையும் இந்தப்பகுதி உள்ளடக்கியுள்ளது. ஆறாவது: அல்லாஹ் அவனின் முன்னறிவின் பிரகாரம் தீர்மானித்து விதித்த விதியை ஈமான் கொள்வது, இதில் அல்லாஹ் தான் முன்னறிவின் படி விதித்துள்ள விடயங்களையும், விதித்த அந்த விடயங்களில் ஆழ்ந்த நோக்கமுள்ளது என்பதையும், அது நிகழ்வதற்கு அவனின் நாட்டமும் தேவை என்பதையும், விதித்த விடயங்கள் யாவும் அவன் விதித்தபடி நடைபொறும் என்பதையும், இப்பிரபஞ்ஞத்தில் நிகழும் அனைத்து விடயங்களையும் பற்றிய முழுமையான அறிவு அல்லாஹ்விடத்தில் உள்ளது என்பதையும் இது உள்ளடக்கியுள்ளது. தொடர்ந்தும் அவர் இஹ்ஸான் குறித்து கேட்டார் அதற்கு நபியவர்கள் இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீ காண்பது போல் வணங்குவீராக. ஆக இந்த (நிலையை) அந்தஸ்தை எய்துகொள்ள முடியவில்லை என்றால் அல்லாஹ்வை அவன் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் வணங்குவீராக. இதில் முதலாவது நிலையானது நேரடியாகப் பார்த்தல் என்ற அந்தஸ்தையும் இரண்டாவது அவதானம் எனும் அந்தஸ்தையும் குறிக்கிறது.

பின்னர் அவர் மறுமை நாள் எப்போது நிகழும்? என வினவினார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறுமை நாள் நிகழ்வது குறித்த அறிவை அல்லாஹ் மாத்திரமே பெற்றுள்ளான்.(தனதாக்கிக் கொண்டுள்ளான்) அவனின் படைப்புகளில் எவரும் அது குறித்து அறியமாட்டார்கள். கேள்விகேட்டவரும் கேட்கப் பட்டவரும் இதில் விதிவிலக்கானோர் அல்லர். அவர்களும் அதனை பற்றி அறியமாட்டார்கள் என தெளிவு படுத்தினார்கள்.

பின்னர் அவர் மறுமை நாளின் அடையாளங்கள் குறித்துக் கேட்டார். அதற்கு நபியவர்கள், அடிமைப் பெண்களும் அவர்களது பிள்ளைகளும் அதிகரித்தல், அல்லது பிள்ளைகள் தமது தாய்மார்களை அடிமைகளைப் போன்று நடத்துதல், ஆடு மேய்க்கக் கூடிய சாமான்ய வறியவர்களுக்கு இறுதிக் காலங்களில் வசதி ஏற்பட்டு மாடமாளிகைகளைக் கட்டுவதில் போட்டிபோட்டு, பெருமைப் பட்டுக்கொள்ளுதல் போன்றவை அதன் அடையாளங்களில் சில என நபியவர்கள் தெளிவு படுத்தினார்கள்.

பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேள்வி கேட்டவர் ஜிப்ரீல் என்றும் அவர் புனித இம்மார்க்கத்தை ஸஹாபாக்களுக்கு கற்றுத்தர வந்தார் எனவும் தெரிவித்தார்கள்.
03

Benefits

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னைத் தோழர்களுக்கு மேலாக நினைக்காமல் அவர்களுடன் சரி சமமாக உட்கார்வதன் மூலம் நபியவர்களின் அழகிய நற்குணம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கேள்வி கேட்பவர் தடையின்றி அச்சமின்றி கேட்பதற்காக அவருடன் மென்மையாக நடந்து, நெருக்கமாக உட்கார வைத்தல்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களிடமிருந்து கற்பதற்காக ஒழுக்கமான முறையில் அன்னாருக்கு முன்னால் உட்கார்ந்ததைப் போன்று ஆசிரியரிடமும் ஒழுக்கமாக நடந்து கொள்ளல்.
இஸ்லாத்தின் தூண்கள் ஐந்தாகும், ஈமானின் அடிப்படைகள் ஆறாகும்.
இஸ்லாம், ஈமான் ஆகிய இரண்டு சொற்களும் ஒரே இடத்தில் கூறப்படும் போது வெளிப்படையான விடயங்களை இஸ்லாம் எனவும், மறைவான நம்பிக்கை சார்ந்த விடயங்களை ஈமான் எனவும் விளக்கப்படுகிறது.
மார்க்கம் என்பது பல்வேறு படித்தரங்களைக் கொண்டது அந்தவகையில் முதல் படித்தரம் இஸ்லாம், இரண்டாவது படித்தரம் ஈமான், மூன்றாம் படித்தரம் இஹ்ஸான் இவற்றுள் இஹ்ஸானே உயர் படித்தரமாகும்.
அறிவின்மையே கேள்வி கேட்பவரின் அடிப்படையாகும். அந்த அறியாமையே கேள்வி கேட்பதற்கு ஒருவரை தூண்டும் அம்சம். இதன் காரணமாகவே நபியவர்களிடம் வந்தவர் கேள்வி கேட்டுவிட்டு அதனை உண்மை எனக் கூறியது ஸஹாபாக்களை ஆச்சரியத்திலாழ்த்தியது.
ஒன்றைக் கூறும் போது மிக முக்கியமானதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாத்தைப் பற்றி விளக்கும் போது இரு சாட்சியங்களைக் கொண்டும், ஈமானைப் பற்றி விளக்கும் போது அல்லாஹ்வை நம்புவதைக் கொண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
தம்முடன் இருப்போரும் அறிந்து தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கேள்வி கேட்பவர் தான் அறிந்த விடயங்களைக் கூட அறிஞர்களிடம் கேட்க முடியும்.
மறுமை நாள் எப்போது நிகழும் என்பது பற்றிய அறிவை அல்லாஹ் மாத்திரமே அறிந்து வைத்துள்ள விடயங்களில் ஒன்றாகும்.

Attribution

[இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

Categories

Share

Share hadeeth

Sharing options · 0 Total shares

Share

← Back to encyclopedia
Shopping Basket

Loading...