அல்லாஹ் ' உங்களுக்கும் தர்மம் செய்யக் கூடியவற்றை அருளவில்லையா?" ஒவ்வொரு 'தஸ்பீஹும்'; (ஸுப்ஹானல்லாஹ்) ஒரு தர்மமாகும் (ஸதகாவாகும் ). ஒவ்வொரு தக்பீரும்' (அல்லாஹு அக்பர்) ஒரு ஸதகாவாகும். ஒவ்வொரு தஹ்லீலும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) ஒரு ஸதகாவாகும்.ஒரு நன்மையை ஏவுவதும் ஸதகா. ஒரு தீமையை தடுப்பதும் ஸதகா. உங்கள் மனைவியரோடு உடலுறவுகொள்வதும் ஸதகா
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களில் சிலர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதரே! அதிகம் செல்வமுள்ளவர்கள் மிகுந்த நற்கூலியை சம்பாதித்துச் சென்றார்கள். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு நோற்பது போலவே நோன்பு அவர்களும் நோற்கிறார்கள் இன்னும் அவர்கள் தங்களது தேவைக்கு மிகுதியாக உள்ள செல்வத்திலிருந்து தர்மமும் செய்கிறார்கள். அதற்கு இறைத்தூதர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் : "அல்லாஹ் ' உங்களுக்கும் தர்மம் செய்யக் கூடியவற்றை அருளவில்லையா?" ஒவ்வொரு 'தஸ்பீஹும்'; (ஸுப்ஹானல்லாஹ்) ஒரு தர்மமாகும் (ஸதகாவாகும் ). ஒவ்வொரு தக்பீரும்' (அல்லாஹு அக்பர்) ஒரு ஸதகாவாகும். ஒவ்வொரு தஹ்லீலும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) ஒரு ஸதகாவாகும்.ஒரு நன்மையை ஏவுவதும் ஸதகா. ஒரு தீமையை தடுப்பதும் ஸதகா. உங்கள் மனைவியரோடு உடலுறவுகொள்வதும் ஸதகா. அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் இச்சையை நிறைவு செய்ய வருகிறார் அதற்கும் அவருக்கு நற்கூலி உண்டா ? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 'அதனை ஹராமான வழியில் தீர்த்தால் அவருக்கு பாவமுண்டென கருதுகின்றீர்களா? அவ்வாறே அதனை ஹலாலான முறையில் தீர்த்துக்கொண்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு.' " என்றார்கள்.
Explanation
Benefits
நற்செயல்களுக்கான வழிகள் அதிகம் காணப்படுகின்றமை. அதாவது ஒரு முஸ்லிம் தூயமையான எண்ணத்துடனும்; நல்ல நோக்கத்துடனும் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தையும் இது உள்ளடக்கும்.
இஸ்லாத்தின் எளிமை மற்றும் இலகுதன்மை எடுத்துக்காட்டப்பட்டுள்ளமை. இந்த வகையில் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படிந்து நடப்பதற்குரியவற்றை பெற்றுக் கொள்கிறான்.
இமாம் நவவி அவர்கள் கூறுகிறார்கள்: அனுமதிக்கப்பட்ட சாதாரண செயல்கள் தூய்மையான நிய்யத்தின் மூலம் வணக்கமாக மாறுகிறது என்பதற்கான ஆதாரமாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளது. அதாவது ஒருவர் அல்லாஹ் கட்டளையிட்டபடி மனைவியுடன் நல்ல முறையில் உறவாடி அன்பாக நடந்து கொண்டு அவளின் உளரீதியான உடல் ரீதியான தேவையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கிலும், அல்லது ஒரு நல்ல குழந்தையைத் எதிர்பார்த்து அவளுடன் இணைவதும், தானும் தனது மனைவியும் கற்பை பேணும் நோக்கில் தடைசெய்யப்பட்டதைப் பார்ப்பதையோ, அதைப் பற்றி சிந்திப்பதையோ, அல்லது அதை விரும்புவதையோ தடுத்துக் கொள்ளும் நன்நோக்கிலும் ஒருவர் தனது துணையுடன் உடலுறவு கொள்வது வழிபாட்டுச் செயலாக மாறும்.
விடயத்தை கேட்பவர் தெளிவாகவும் விளங்கிக் கொள்ளவும் அவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவும் உதாரணம் மற்றும்; ஒப்பீடுகளை கூறல்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

