அபூ ஸஈதே! யார் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் பொருந்திக்கொண்டால், அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : "அபூ ஸஈதே! யார் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் பொருந்திக்கொண்டால், அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும்." ஆச்சரியப்பட்ட அபூ ஸஈத் அவர்கள், "அதை எனக்கு மீண்டும் கூறுங்கள்" என்று கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் கூறிவிட்டு மேலும் இவ்வாறு கூறினார்கள் : "இன்னுமொன்று உள்ளது, அதைக் கொண்டு ஓர் அடியான் சுவனத்தில் நூறு படித்தரங்கள் உயர்த்தப்படுவான்" அப்போது அபூ ஸஈத் அவர்கள், 'அது என்ன அல்லாஹ்வின் தூதரே!' எனக் கேட்ட போது, "அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவது; அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவது" என்று கூறினார்கள்.
Explanation
Benefits
அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதன் மகத்துவம்.
அறப்போராளிக்கு சுவனத்தில் உள்ள உயர்ந்த அந்தஸ்து.
சுவனத்தில் மட்டிடமுடியாத படித்தரங்களும், எண்ணிலடங்காத அந்தஸ்துக்களும் உள்ளன. அறப்போராளிகளுக்கு அதில் நூறு படித்தரங்கள் உண்டு.
நன்மைகள், அதன் வாயில்கள் மற்றும் காரணிகளை அறிவதில் நபித்தோழர்களுக்கு இருந்த விருப்பம்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

