'தனது ரப்பை நினைவுகூறுபவனுக்கும், தனது ரப்பை நினைவுகூறாதவனுக்கும் உதாரணம், உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'தனது ரப்பை நினைவுகூறுபவனுக்கும், தனது ரப்பை நினைவுகூறாதவனுக்கும் உதாரணம், உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும். முஸ்லிம் அவர்களது அறிவிப்பில், 'அல்லாஹ்வை நினைவு கூறப்படும் வீட்டிற்கும், நினைவு கூறப்படாத வீட்டிற்கும் உதாரணம் உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும்.' என்று உள்ளது.
Explanation
வீடுகளும் இவ்வாறுத்தான். அங்கு வசிப்பவர்கள் அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களாக இருந்தால், உயிருள்ள வீடு எனப்படும். அவ்வாறில்லா விட்டால், அங்கிருப்பவர்கள் அல்லாஹ்வை நினைவுகூறாத காரணத்தினால், இறந்த வீடு எனப்படும். வீடு, உயிருள்ளது, உயிரற்றது எனக் கூறப்பட்டுள்ளதன் மூலம் நாடப்படுவது அதில் வசிப்பவர்களே!.
Benefits
உடம்புக்கு உயிர் வாழ்வைக் கொடுப்பது போன்று, இறைநினைவு உள்ளத்திற்கு வாழ்வைக் கொடுக்கும்.
ஒரு கருத்தை மிக இலகுவாக புரிய வைப்பதற்கு உதாரணம் கூறல் நபிவழிகாட்டலாகும்.
இமாம் நவவி கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸில், வீடுகளில் அல்லாஹ்வை நினைவுகூறவது வலியுறுத்தப் படுகின்றது.
இமாம் நவவி கூறுகின்றார்கள்: மரணித்தபின் ஒருவர் நல்ல நிலைக்கே செல்வாராக இருப்பினும், நீண்ட காலம் உயிரோடு இருந்து வணக்கங்களில் ஈடுபடப் கிடைப்பது அதை விடச் சிறப்பாகும். ஏனெனில், உயிரோடிருப்பவர் அவரை விட மேலும் வணக்கங்களைச் செய்து அவரோடு வந்து இணைந்து கொள்வார்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

