உங்களில் எவரும் அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே தவிர மரணிக்கவேண்டாம்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது மரணத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : உங்களில் எவரும் அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே தவிர மரணிக்கவேண்டாம்.
Explanation
Benefits
தீபீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள், 'இப்போது நல் அமல்களை செய்யுங்கள். அதன் மூலமே மௌத்தின் போது அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்கு நல்லெண்ணம் வரும். மரணத்திற்கு முன்னரே யாரது அமல்கள் சீர்கெட்டுப் போய் விடுகின்றனவோ, மௌத்தின் போது அவரது எண்ணம் கெட்டுவிடும்.
ஓர் அடியானின் முழுமையான நிலை என்னவென்றால், பயமும், ஆதரவும் சமநிலையாக இருப்பதுடன், அன்ப மிகைத்திருப்பதாகும் . அன்புதான் வாகனம். ஆதரவு அதன் எரிபொருள். அச்சமே அதன் ஓட்டுனர். அல்லாஹ்வே தனது உபகாரத்தாலும், அருளாலும் கொண்டுபோய் சேர்க்கக்கூடியவன்.
மரண தருவாயில் இருக்கும் ஒருவருக்கு நெருக்கமாக இருப்பவர், அவரிடம் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணமும், ஆதரவும் வைக்கும் பகுதியை அழுத்திக் கூறவேண்டும். ஏனெனில், இந்த ஹதிஸை நபியவர்கள் தாம் மரணிக்க மூன்று தினங்களுக்கு முன்னர் கூறியதாகவே உள்ளது.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

