எனக்கு முன்னர் இருந்த எந்த சமுதாயத்திற்கும் அல்லாஹ் அனுப்பிய எந்த நபியாக இருப்பினும், அவருக்கென்று சில சீடர்களும், தோழர்களும் இருந்திருப்பர். அவர்கள் அந்த நபியின் வழிமுறையைப் பற்றிப் பிடிப்பர். அவரது கட்டளையைப் பின்பற்றுவர்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனக்கு முன்னர் இருந்த எந்த சமுதாயத்திற்கும் அல்லாஹ் அனுப்பிய எந்த நபியாக இருப்பினும், அவருக்கென்று சில சீடர்களும், தோழர்களும் இருந்திருப்பர். அவர்கள் அந்த நபியின் வழிமுறையைப் பற்றிப் பிடிப்பர். அவரது கட்டளையைப் பின்பற்றுவர். அவர்களுக்குப் பின்னர் சில வழித்தோன்றல்கள் வருவர். செய்யாதவற்றைக் கூறுவார்கள். ஏவப்படாதவற்றைக் செய்வார்கள். யாரெல்லாம் அவர்களோடு கையால் போரிடுகின்றார்களோ, அவர்கள் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு நாவினால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு உள்ளத்தால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். அதற்கப்பால், ஈமானில் கடுகளவும் இல்லை.
Explanation
Benefits
உள்ளம் ஒரு பாவத்தை வெறுக்காமல் இருப்பது, ஈமான் பலவீனமாக உள்ளது, அல்லது ஈமானே இல்லை என்பதற்கு ஓர் ஆதாரமாகும்.
நபிமார்களுக்கு இலகுபடுத்திக்கொடுக்கும் விதமாக, அவர்களுக்குப் பின்னர் அவர்களது தூதைச் சுமந்து செல்லும் சிலரை ஏற்படுத்தியுள்ளமை.
யார் வெற்றிபெற விரும்புகின்றாரோ, அவர் நபிமார்களின் வழிமுறையைப் பின்பற்றட்டும். ஏனெனில், அவர்களது வழி தவிர்ந்த அனைத்து வழிகளும் அழிவும், வழிகேடும் தான்.
நபியவர்களது, மற்றும் நபித்தோழர்களது காலத்தை விட்டும் தூரமாகிக்கொண்டு செல்லும் போதெல்லாம், மக்கள் ஸுன்னாக்களை விட்டுவிட்டு, மனோஇச்சைகளைப் பின்பற்றி, நூதனங்களை உருவாக்கி விடுவர்.
ஜிஹாத் எனும் போராட்டத்தின் படிமுறைகளைத் தெளிவுபடுத்துதல். தடுத்து நிறுத்தும் சக்தியுடைய, பொறுப்புதாரிகள், ஆட்சியார்கள், தலைவர்கள் போன்றோர் கையால் தடுப்பதும், அடுத்த கட்டமாக, பேச்சின் ஊடாக, சத்தியத்தைத் தெளிவுபடுத்தி அதன்பால் அழைப்பது, அடுத்த கட்டமாக, உள்ளத்தின் மூலம், பாவத்தைப் பொருந்திக் கொள்ளாமலோ, நேசிக்காமலோ வெறுப்பது.
நன்மையை ஏவுவதும், பாவத்தைத் தடுப்பதும் கட்டாயமாகும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

