"அல்லாஹ் ஹலாலாக்கியதை அவர்கள் ஹராமாக்க நீங்களும் ஹராமாக்கவில்லையா? அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்க நீங்களும் ஹலாலாக்கவில்லையா? எனக் கேட்க, நான் ஆம் என்றேன், "அதுதான் அவர்களை வணங்குவதாகும்" என்றார்கள்.
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அத்ய் பின் ஹாதிம் (ரலி) கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் "அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களோ ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்" எனும் வசனத்தை ஓதத் தான் கேட்ட போது நாம் அவர்களை வணங்குவதில்லையே என்று கூறினேன். அப்போது நபியவர்கள் : "அல்லாஹ் ஹலாலாக்கியதை அவர்கள் ஹராமாக்க நீங்களும் ஹராமாக்கவில்லையா? அல்லாஹ் ஹராமாக்கியதை அவர்கள் ஹலாலாக்க நீங்களும் ஹலாலாக்கவில்லையா? எனக் கேட்க, நான் ஆம் என்றேன், "அதுதான் அவர்களை வணங்குவதாகும்" என்றார்கள்.
Explanation
Benefits
ஒன்றை ஆகுமாக்குவதும், தடுப்பதும் அல்லாஹ்வின் உரிமையாகும்.
வழிப்படுவதில் இணைவைப்பு எனும் இணைவைப்பின் வகைகளில் ஒன்று இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அறிவீனர்களுக்குக் கற்றுக் கொடுப்பதும் மார்க்கத்தில் ஒரு பகுதியாகும்.
வணக்கம் என்பது அல்லாஹ் விரும்பி, பொருந்திக் கொள்ளும் அனைத்து வித உள்ரங்க, வெளிப்படையான சொல், செயல் அனைத்தையும் உள்ளடக்கும் பரந்த பொருள் கொண்ட ஒரு வார்த்தையாகும்.
யூத, கிறிஸ்தவ மதகுருக்கள் வழிகேட்டிலேயே உள்ளனர்.
யூத, கிறிஸ்தவர்களும் இணைவைக்கின்றனர் என்பதை இந்நபிமொழி உறுதி செய்கின்றது.
அனைத்து இறைத்தூதர்களினதும் மார்க்கத்தின் அடிப்படை ஒன்றுதான், அதுதான் ஓரிறைக் கொள்கையாகும்.
படைத்தவனுக்கு மாறு செய்யும் விடயத்தில் படைப்பினத்திற்கு வழிப்படுவது அவர்களை வணங்குவதாகும்.
அறியாத சட்டங்களை அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
அறிவு கற்பதில் நபித்தோழர்களின் ஆர்வத்தை இங்கு காணலாம்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

