HadeethEnc · 1.36.0
'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள். பி;ன்னர் அவர்கள் குளிப்பார்கள்
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள். பி;ன்னர் அவர்கள் குளிப்பார்கள் . பின்னர் விரல்களால்; தலை முடியின் அடிப்பாகம் நனையுமளவிற்கு கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்.' நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்' என ஆஇஷா(ரழியல்லாஹு அன்ஹா) கூறுகிறார்கள்.
02
Explanation
'நபிஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்ற நாடினால் தனது இரு கைகளையும் முதலில் கழுபவர்களாக இருந்தார்கள். பின்னர்; தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள் பின்னர் தனது தலைமுடியின் அடிப்பாகத் தோல் நனையும் வரை இரு கைகளினாலும் கோதுவார்கள். பின்னர் தலையின் மீது மூன்று முறை நீரை ஊற்றிவிட்டு பின்னர் உடலின் எஞ்சிய எல்லாப் பகுதிகளையும் கழுவுவார்கள். நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்' என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்.
03
Benefits
குளிப்பு: சாதாரணக் குளியல் என்றும் பூரணமான குளியல் என இரு வகைப்படும். சாதாரணமாகக் குளித்தல் என்பது ஒருவர் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளுதல் என்ற நிய்யத்துடன் குளித்தல். அதாவது வாய்கொப்பளித்து நாசுக்கு நீர்செலுத்தி சிந்தி விட்டு உடல் முழுவதிலும் நீர் ஊற்றிக் கொள்வதைக் குறிக்கும். ஆனால் பூரணமானக் குளித்தல் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குளித்துக் காட்டியது போன்று குளிப்பதாகும்.
ஜனாபத் என்பது விந்தை வெளியேறியவர் அல்லது விந்து வெளியேராவிட்டாலும் உடலுறவில் ஈடுபட்டவரைக் குறிக்கும்.
கணவன் மனைவி இருவரும் ஒரே பாத்திரத்தில் குளிப்பதும் அவர்களின் இருவரின் அவ்ரத்துக்களை பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும்.
ஜனாபத் என்பது விந்தை வெளியேறியவர் அல்லது விந்து வெளியேராவிட்டாலும் உடலுறவில் ஈடுபட்டவரைக் குறிக்கும்.
கணவன் மனைவி இருவரும் ஒரே பாத்திரத்தில் குளிப்பதும் அவர்களின் இருவரின் அவ்ரத்துக்களை பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும்.
Attribution
[இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares

