ஒரு முஸ்லிமான - அல்லது முஃமினான - ஒரு அடியான் வுழூ செய்யும் விதமாக, முகத்தைக் கழுவினால், அவர் தனது இரு கண்களாலும் பார்த்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது முகத்திலிருந்து வெளியேறிவிடும்
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முஸ்லிமான - அல்லது முஃமினான - ஒரு அடியான் வுழூ செய்யும் விதமாக, முகத்தைக் கழுவினால், அவர் தனது இரு கண்களாலும் பார்த்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது முகத்திலிருந்து வெளியேறிவிடும். அவர் தனது இரு கைகளையும் கழுவினால், அவரது இரு கைகளும் பிடித்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது இரு கைகளையும் விட்டு வெளியேறிவிடும். அவர் இரு கால்களையும் கழுவினால், அவர் தனது இரு கால்களாலும் நடந்துசென்ற அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - வெளியேறிவிடும். இவ்வாறே அவர் பாவங்களை விட்டும், தூய்மையடைந்த ஒருவராக வெளியேறுவார்.
Explanation
Benefits
வணக்க, வழிபாடுகளுக்கு உள்ள நன்மைகள் மற்றும் கூலிகளைக் கூறி, மக்களுக்கு ஆர்வமூட்டுவது நபியவர்களின் வழிமுறைகளில் ஒன்றாகும்.
மனித உறுப்புக்களில் ஒவ்வொரு உறுப்பும் சில பாவங்களில் ஈடுபடுகின்றன. அதனால், அந்தப் பாவங்கள், அவை செய்யப்பட்ட உறுப்புக்களுடனேயே இருக்கும். பாவமன்னிப்பு வழங்கப்படும் போது, அவ்வுறுப்புக்களில் இருந்தே வெளியேறுகின்றன.
வுழூ என்பது, அதன் உறுப்புக்களைக் கழுவும் போது புறச் சுத்தத்தைப் பெற்றுத் தருகின்றது. மேலும், அவ்வுறுப்புக்களால் செய்யப்பட்ட, பாவங்களை நீக்கி அகச் சுத்தத்தையும் பெற்றுத் தருகின்றது.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

