'நீங்கள் திரும்பிச் சென்று, மீண்டும் தொழுங்கள். நீங்கள் (சரியாகத்) தொழவில்லை.'
Choose an available translation of this Hadeeth
Hadeeth text
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலினுள் நுழைந்தார்கள். அப்போது ஒரு மனிதர் நுழைந்து, தொழுது விட்டு, நபியவர்களுக்கு ஸலாம் கூறினார். அப்போது நபியவர்கள் அவரது ஸலாமுக்கு பதில் அளித்து விட்டு, 'நீங்கள் திரும்பிச் சென்று, மீண்டும் தொழுங்கள். நீங்கள் (சரியாகத்) தொழவில்லை.' என்று கூறியனுப்பினார்கள். அந்த மனிதரும் திரும்பிச் சென்று, ஏற்கனவே தொழுதது போன்று மீண்டும் தொழுதார். பின்பும் நபியவர்களிடம் வந்து ஸலாம் கூறியதும் நபியவர்கள் பதில் கூறிவிட்டு, (மீண்டும்) 'நீங்கள் திரும்பிச் சென்று, மீண்டும் தொழுங்கள். நீங்கள் (சரியாகத்) தொழவில்லை.' என்று கூறியனுப்பினார்கள். (இவ்வாறு) மூன்று தடவை நிகழ்ந்த பின்னர் அம்மனிதர், 'உம்மை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதனை விட அழகாக என்னால் தொழமுடியாது. எனக்குக் கற்றுத் தாருங்கள்' என்று கூறினார். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : "நீங்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால், தக்பீர் கூறிவிட்டு, பின்பு உங்களால் இலகுவாக ஓதமுடியுமான சில அல்குர்அன் வசனங்களை ஓதுங்கள். பின்பு ருகூஉ செய்து, அமைதியடையும் வரை ருகூஇலேயே இருங்கள். பின்பு எழுந்து நேரான நிலைக்கு வாருங்கள். பின்பு ஸுஜூத் செய்து, அமைதியடையும் வரை ஸுஜூதிலேயே இருங்கள். பின்னர் எழுந்து, அமைதியடையும் வரை அமர்ந்து கொண்டிருங்கள். இவ்வாறே உங்களது முழுத் தொழுகையிலும் செய்யுங்கள்'.
Explanation
Benefits
துமஃனீனா எனும், ஆறுதலாக இருத்தல், தொழுகையின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும்.
இமாம் நவவீ (ரஹ்) கூறுகின்றார்கள் : தொழுகையின் கடமைகளில் ஏதாவதொன்றில் ஒருவர் குறைவைத்தாலும், அவரது தொழுகை நிறைவேற மாட்டாது என்பதை இது அறிவிக்கின்றது.
இமாம் நவவீ (ரஹ்) கூறுகின்றார்கள் : கற்பவர், அறியாதவர் ஆகியோருடன் மென்மையாகவும், மிருதுவாகவும் நடந்து கொள்ளல், சட்டத்தை அவருக்குத் தெளிவுபடுத்தல், நோக்கங்களை அவருக்கு சுருக்கமாக விளக்குதல், அவர் செய்ய வேண்டிய விடயங்களில் முக்கியமானதை மற்றும் கற்றுக் கொடுப்பதுடன், அவரது அந்த நிலையில் நினைவில் வைத்திருக்கவோ, செய்யவோ முடியாத மேலதிகமான விடயங்களை கற்றுக்கொடுக்காமல் இருத்தல் என்பவற்றையும் இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது.
இமாம் நவவீ (ரஹ்) கூறுகின்றார்கள் : பத்வா வழங்கும் ஒரு முப்தியிடம் ஒரு விவகாரம் பற்றிக் கேற்கப்பட்டு, அம்மனிதர் கேட்காத தேவையான வேறு விடயங்களும் இருக்கும் பட்சத்தில், அதையும் கூறுவது நல்லது என்பதை இது உணர்த்துகின்றது. இது நன்மை நாடுவதாக இருக்குமே தவிர, அநாவசியமான பேச்சாக இருக்கமாட்டாது.
தனது குறையை ஏற்றுக்கொள்ளல். ஏனெனில், அம்மனிதர், 'இதைவிட என்னால் அழகாகத் தொழ முடியாது' எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று கூறினார்.
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல், கற்பவர் அறிஞரிடம் தனக்குக் கற்பித்துத் தருமாறு கேட்டல் போன்ற பயன்களையும் இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது.
சந்திக்கும் போது ஸலாம் கூறுவது விரும்பத்தக்கதாகவும், அதற்கு பதில் அளிப்பது கடமையாகவும் உள்ளமை. குறுகிய இடைவெளியில் மீண்டும் சந்தித்தாலும் மீண்டும் ஸலாம் கூறுவது விரும்பத்தக்கதாகும். அவ்வாறு கூறும் ஒவ்வொரு தடவையும், பதில் அளிப்பது கட்டாயமாகும்.
Attribution
Categories
Share hadeeth
Sharing options · 0 Total shares

