HadeethEnc · 1.36.0
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் ஒரு கூட்டத்தினரால் மண் மற்றும் குப்பை கூலங்கள் வீசப்படும் இடத்திற்குச் சென்று நின்ற நிலையில் சிறுநீர் கழித்தார்கள்
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் ஒரு கூட்டத்தினரால் மண் மற்றும் குப்பை கூலங்கள் வீசப்படும் இடத்திற்குச் சென்று நின்ற நிலையில் சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவரைவிட்டு ஓதுங்கிச் சென்றேன். அப்பொழுது தன்னிடம் நெறுங்கி நிற்குமாறு நபியவர்கள்
என்னைப் பணித்தார்கள். நான் அவர்களை நெருங்கி அவர்களது இரு குதிகால்களிடத்தில் நின்று (அவர்களை மறைத்துக் கொண்டேன்.) அவரகள் வுழூ செய்து தனது இரு ( خف குப்பு) காலுறைகளின் மீது தண்ணீரினால் (மஸ்ஹு) தடவிக் கொணடார்கள்.
02
Explanation
ஹுதைபதுப்னுல் யமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன், சிறு நீர் கழிக்க நாடிய அவர்கள் ஒரு கூட்டத்தினரால்; குப்பைகூலங்கள் மற்றும் வீடுகளில் கூட்டப்படும் மண் வீசப்பட்ட இடத்திற்குச் சென்று, நின்ற நிலையில் சிறுநீர் கழித்தார்கள். அவர்களது அன்றாட வாழ்வில் பெரும்பாலும் குந்திய நிலையில் சிறுநீர் கழிப்பதுவே அவர்களது வழமையாக இருந்தது.
ஹுதைபாஅவர்கள் நபியவர்களை விட்டும் தூரமானார்கள். அப்பொழுது ஹுதைபாவுக்கு நெருங்கி நிற்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் .
அவ்வேளை ஹுதைபா அவர்கள் நபியவர்களை நெருங்கி நபியவர்களின் குதிகால்கால்கள் பக்கமாக நின்றார்கள், நபியவர்களை அந்நிலையில் எவரும் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக நபியவர்களை மறைத்துக் கொண்டார்கள்.
பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூ செய்தார்கள், இரு கால்களை கழுவுவதற்கு பதிலாக தான் காலில் அணிந்திருந்த இரு 'خف குப்பு'களையும் களையாது அவ்விரண்டின் மீதும் தண்ணீரினால் தடவிப் போதுமாக்கி கொண்டார்கள்.
'خف குப்பு' என்பது: மெல்லிய தோல், அல்லது அதுபோன்றவைகளினால் இருகால்களின் கரண்டை மறையும் அளவு செய்யப்பட்ட காலுறை போன்று இரு கால்களிலும் அணியப்படக் கூடியது.
ஹுதைபாஅவர்கள் நபியவர்களை விட்டும் தூரமானார்கள். அப்பொழுது ஹுதைபாவுக்கு நெருங்கி நிற்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் .
அவ்வேளை ஹுதைபா அவர்கள் நபியவர்களை நெருங்கி நபியவர்களின் குதிகால்கால்கள் பக்கமாக நின்றார்கள், நபியவர்களை அந்நிலையில் எவரும் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக நபியவர்களை மறைத்துக் கொண்டார்கள்.
பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூ செய்தார்கள், இரு கால்களை கழுவுவதற்கு பதிலாக தான் காலில் அணிந்திருந்த இரு 'خف குப்பு'களையும் களையாது அவ்விரண்டின் மீதும் தண்ணீரினால் தடவிப் போதுமாக்கி கொண்டார்கள்.
'خف குப்பு' என்பது: மெல்லிய தோல், அல்லது அதுபோன்றவைகளினால் இருகால்களின் கரண்டை மறையும் அளவு செய்யப்பட்ட காலுறை போன்று இரு கால்களிலும் அணியப்படக் கூடியது.
03
Benefits
خف குப்பின் மீது தண்ணீரினால் மஸ்ஹு (தடவுதல் ) தடவுதல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயாமாகும்.
தனது உடம்பில் சிறுநீர் படாதாவாறு நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பது அனுமதிக்கப்பட்டது. (நபியவர்கள் வழமையில் அமர்ந்த நிலையிலேயே சிறு நீர் கழித்திருக்கிறார்கள் என்பதைக் கருத்திற்கொள்க.)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; குப்பைகூலங்கள் மற்றும் வீடுகளில் பெருக்கி வீசப்படும் குப்பைகள் உள்ள இடத்தை தெரிவு செய்தது பெரும்பாலும் அந்த இடம் பள்ளமாக இருப்பதன் காரணமாக அதில் கழிக்கப்படும் சிறுநீர் கழிப்பவர் மீது மீண்டு வந்து அதிலிருந்து ஒரு துளிஅளவும் உடம்பிலோ ஆடையிலோ படாதிருக்கும் என்பதினாலாகும்.
தனது உடம்பில் சிறுநீர் படாதாவாறு நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பது அனுமதிக்கப்பட்டது. (நபியவர்கள் வழமையில் அமர்ந்த நிலையிலேயே சிறு நீர் கழித்திருக்கிறார்கள் என்பதைக் கருத்திற்கொள்க.)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; குப்பைகூலங்கள் மற்றும் வீடுகளில் பெருக்கி வீசப்படும் குப்பைகள் உள்ள இடத்தை தெரிவு செய்தது பெரும்பாலும் அந்த இடம் பள்ளமாக இருப்பதன் காரணமாக அதில் கழிக்கப்படும் சிறுநீர் கழிப்பவர் மீது மீண்டு வந்து அதிலிருந்து ஒரு துளிஅளவும் உடம்பிலோ ஆடையிலோ படாதிருக்கும் என்பதினாலாகும்.
Attribution
[இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares

