HadeethEnc · 1.36.0
'யாராவது, வேட்டை நாய், அல்லது காவல் நாய் ஆகியவையல்லாத வேறு நாய்களை வைத்துக் கொண்டிருந்தால், அவரது அமல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் இரு கீராத்கள் அளவு குறையும்
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'யாராவது, வேட்டை நாய், அல்லது காவல் நாய் ஆகியவையல்லாத வேறு நாய்களை வைத்துக் கொண்டிருந்தால், அவரது அமல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் இரு கீராத்கள் அளவு குறையும். ஸாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் (அல்லது பயிர்நிலங்களைப் பாதுகாக்கும் நாய்) என்றும் இணைத்துக் கூறுவார்கள். அவர்கள் விவசாயம் செய்யும் ஒருவராகக் காணப்பட்டார்கள்.
02
Explanation
இங்கு நபியவர்கள், வேட்டையாடல், கால்நடைகள் மற்றும் மற்றும் பயிர்களைப் பாதுகாத்தல் போன்ற தேவைகளுக்காகவே அன்றி, நாய்களை வைத்துக் கொண்டிருப்பதை எச்சரிக்கின்றார்கள். வேறு காரணங்களுக்காக யாராவது வைத்துக் கொண்டிருந்தால், அவருடைய நற்கருமங்களின் கூலியில் இருந்து தினமும் இரண்டு கீராத்கள் குறையும் என்றும் கூறுகின்றார்கள். இது அல்லாஹ்விடம் (மாத்திரம்) அறியப்பட்டுள்ள ஒரு அளவாகும்.
03
Benefits
விதிவிலக்களிக்கப்பட்ட காரணிகளுக்காகவே தவிர, ஒரு முஸ்லிம் நாய்களை வைத்துக் கொள்ள முடியாது.
நாய்களை வைத்துக்கொண்டிருப்பதில், பல்வேறு கெடுதிகளும், தீங்குகளும் இருப்பதால் அவ்வாறு வைத்துக்கொள்வது தடுக்கப்பட்டுள்ளமை. ஏனெனில், நாய் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என நபியவர்கள் கூறியுள்ளமை உறுதியாகத் தரிப்பட்டுள்ளது. மேலும், அதில் உள்ள கடுமையான அசுத்தம் நீராலும், மண்ணாலும் பலமுறைகள் கழுவினாலே தவிர நீங்கமாட்டாது என்பதும் ஒரு காரணமாகும்.
நாய்களை வைத்துக்கொண்டிருப்பதில், பல்வேறு கெடுதிகளும், தீங்குகளும் இருப்பதால் அவ்வாறு வைத்துக்கொள்வது தடுக்கப்பட்டுள்ளமை. ஏனெனில், நாய் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என நபியவர்கள் கூறியுள்ளமை உறுதியாகத் தரிப்பட்டுள்ளது. மேலும், அதில் உள்ள கடுமையான அசுத்தம் நீராலும், மண்ணாலும் பலமுறைகள் கழுவினாலே தவிர நீங்கமாட்டாது என்பதும் ஒரு காரணமாகும்.
Attribution
[இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares

