HadeethEnc · 1.36.0
'என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக்குவியல், அல்லது அதில் பாதியளவைக்கூட (அவரது) அந்தத் தர்மம் எட்ட முடியாது.'
Available translations
Choose an available translation of this Hadeeth
01
Hadeeth text
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக்குவியல், அல்லது அதில் பாதியளவைக்கூட (அவரது) அந்தத் தர்மம் எட்ட முடியாது.'
02
Explanation
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லலம் அவர்கள், குறிப்பாக ஆரம்பத்தில் இஸ்லாத்தைத் தவழுவிய முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரி ஸஹாபாக்களைக் திட்டுவதை தடைசெய்துள்ளார்கள். மேலும், ஒருவர் உஹுது மலையின் தங்கத்திற்கு சமமான தொகையைச் செலவிட்டாலும், ஒரு நபித்தோழரின்; (ஒரு)கைக்குவியல் அல்லது அதன் அரைவாசியை செலவழித்து பெறும் வெகுமதியை அவர் பெறமாட்டார். ஒரு முத்து என்பது ஒரு நடுத்தர அளவிலான நபரின் உள்ளங்கை அளவாகும். தோழர்கள் தங்கள் இஹ்லாஸ் (மனத்தூய்மை) மற்றும் உண்மையான எண்ணத்தின் காரணமாகவும் மக்கா வெற்றிக்கு முன் கடுமையான தேவை இருந்த சந்தர்ப்பத்தில் போர்களுக்காக மிகவும் ஆர்வத்துடன் உதவியமை காரணமாகவும் இவ்வளவு வெகுமதியையும் அந்தஸ்த்தையும் பெற்றனர்.
03
Benefits
ஸஹாபாக்களை திட்டுவதும், ஏசுவதும் ஹராமாகும் மட்டுமல்லாது இது பெரும் பாவங்களில் ஒன்றுமாகும்.
Attribution
[இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]
Categories
Share
Share hadeeth
Sharing options · 0 Total shares

