விபச்சாரத்தை விட்டு விலகி இருக்க இஸ்லாம் கூறும் முக்கிய வழிகள்

الوسائل التي تفيد تجنب الزنا والشذوذ
باللغة التاميلية

விபச்சாரத்தை விட்டு விலகி இருக்க இஸ்லாம் கூறும் முக்கிய வழிகள்

தக்கவாவை கடைப்பிடித்து அதிகம் துஆவில் ஈடுபடல்.

நபி யூசுப் )அலை( அவர்கள் அல்லாஹ்விடம் இப்படி பிரார்த்தித்தார்கள்:

என் இறைவா பெண்களின் சூழ்ச்சியிலிருந்து என்னை நீ காப்பாற்றவில்லை என்றால் நான் அவர்களின் பக்கம் சாய்ந்து விடுவேன். ( யூசுப்: 33.(

அல்லாஹ்வுக்காக ஒன்றை விடுவதால் அல்லாஹ் அதற்கு பதிலான ஒன்றை தருவான் எனும்  எண்ணத்தை வரவழைத்துக் கொள்ளல். நபி (ஸல் ) கூறினார்கள்: மனிதா! நீ ஒன்றை அல்லாஹ்வுக்காக விட்டால் அதைவிட சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு தராமல் விடமாட்டான்.          (நூல் அஹ்மத்)

.

இச்சைகளை தூண்டும் பேச்சுகளை தவிர்த்தல். சபைகளில் இத்தகைய உணர்வைத் தூண்டும் சொல், செயல்களை  தவிர்த்தல். வசதி வாய்ப்புகள் இருப்பின் திருமணத்தை தீவிரப் படுத்தல். முடியாவிடின் நோன்பு நோற்றுக் கொள்ளுதல்.

நபி (ஸல்)கூறினார்கள்:

நிச்சயமாக நோன்பு கேடயமாகும்.

(நூல் புகாரி முஸ்லிம்)

பாலுணர்வை பலவீனப்படுத்த உண்ணல் பருகல் ஆகியவற்றை குறைத்தல் . பார்வையை தாழ்த்தி பெண்கள் காணப்படும் மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் இருந்து தூரமாக இருத்தல் .

அன்னிய பெண்களுடன் தனிமையில் இருப்பதை தவிர்த்தல்.

 

பெண்களை இஸ்லாமிய ஹிஜாப்     அணியுமாறு பணித்தல், அவர்களுடன் குலைந்து பேசுவதை தவிர்த்தல்.

மேலும் அவர்களுடன் தனிமையில் உறவாடுவது,கைலா கு கொடுப்பது, ஒன்றென கலந்திருப்பதை தவிர்த்தல்.

(1) (2) (3) (4) (5) (6) (7)
விபச்சாரம், ஓரினச்சேர்க்கையிருந்து விலகி இருக்க இஸ்லாம் கூறும் மிக முக்கிய வழிகள்.
(8) (9) (10) (11) (12) (13) (14)
சூரா யூசுப் போன்ற படிப்பினைக்குரிய சூராக்களை படிப்பதும் சிந்திப்பதும்.

அவ்வாறே குர்ஆன் சுன்னாவில் இடம் பெற்றுள்ள வரலாற்று சம்பவங்கள், முன்  சென்ற நல்லோர்களின் வரலாறு ஆகியவற்றை படித்தல்.

நன்மையை ஏவி தீமையை தடுக்கும் நல்லோர்களுடன் தோழமை கொண்டு வெறுக்கத்தக்க காரியங்களின் பக்கம் தூண்டும் தீய நட்புகளை தவிர்ந்து வாழுதல். (நீ நடப்பது போலவே நடாத்தப்படுவாய்) எனும் விதியை எண்ணிப்பார்க்கவேண்டும்.

விபச்சாரம் தீர்க்கப்டவேண்டிய கடன் போன்றதே. விபச்சாரம் செய்பவர் அதனாலேயே சோதிக்கப்படுவார்.

ஓய்வை தவிர்த்து அதிகம் உள்ளத்தை நன்மையான  விடையங்களில் ஈடுபடுத்தல்.

 

ஓய்வென்பது மனிதனை கொல்லும் ஒன்றாகும், தனிமையில் இருக்கும் போதே மனசும் ஷைத்தானும் பாவத்தை தூண்டுகின்றனர்.

 

இச்சைகளை தூண்டும் தொடர்பு சாதனங்களை தவிர்த்தல், குறிப்பாக இன்று காணப்படும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அதில் பயன்படுத்தப்படும் செயலிகள் பயன்பாடை தவிர்த்தல்.

தொலைபேசி, கனணி போன்றவற்றை ஏனையோர் காணும் விதமாக பகிரங்கமான இடத்தில் வைப்பது பயன்படுத்துவது. காரணம் மனிதன் தனிமையில் இருக்கும்போதே பலவீனம் அடைகின்றான். நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியை  கவனமாக பேணி வரல். அதில் குறைந்த பட்சம் உள்ளத்தால் வெறுத்தேனும் பாவத்தை குறைத்தல். அவ்வாறு செய்யும்போது உள்ளம் உயிர்பிக்கப்பட்டு நன்மையின் பக்கம் ஆசை கொள்ளும்.

 

 

Shopping Basket